பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21



வாஞ்: ஊரு இருக்குற இருப்ப பயக கெடுத்துடுவாணுகளே

சிங்: நீ சும்மா இரு ஐயரே. பயக சொல்றதும் சரியாத்தான் இருக்கு. நீங்களும் காலத்த அனுசரிச்சுப் போகணும். நீங்கள்லாம் தாழ்ந்தவக. நாங்கள்லாம் உயர்ந்தவக. நீங்கள்லாம் கீழ்தாதி. நாங்கள்லாம் மேல்சாதியினு சொல்லி சும்மா மிரட்டுகிறீங்களே.

வாஞ்: என்ன முதலியார்வாள்! நீங்களும் அவனுக மாதிரி பேசுறீங்க?

சிங்: பின்னே என்ன ? அவன் திதி கொடுக்கலேங்கிறதுக் காக எல்லாரையும் அடிக்கிறதா? என மக்கூட நேத்து சாதி இரண்டொழிய வேறில்லையினு பாடிச்சு. அது சரிதானய்யா.

வாஞ்: இன்னைக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையினு பேசுவாங்க ஜாதி இல்ல-ஆசாரம் இல்லையினு பேசு வாங்க. பேசிட்டா போதுமா? நாய்க்கருக்கும் முதலியாருக்கும் என்ன வித்தியாசம் ? படையாச்சிக்கும் சேர்வை காரருக்கும் என்ன வித்தியாசம். இப்படிப் பேசுறவனுக் நாளைக்கு பணக்காரன் ஏது ஏழை ஏதுன்னுகூட பேசு வானுங்க. நான் எதுக்குச் சொல்றேன்னா நாளை கட்டுக் குழைஞ்சிடும்னு சொல்லவர்ரேன்.

சிங் : ஆமா... ஐயரு சொல்றதும் சரிதான். (பின்னால் மாறுவேஷத்துடன் நின்ற துரைராஜ் இதைக் கேட்டுவிட்டு)

துரை: எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டியதுதான்

வாஞ்: இது என்ன ரஷ்யாவா?

துரை: அங்கேகூட முன்பு இருந்தார்கள் உங்களைப்போன்றோர். அவர்களை அழித்து ஒழித்துவிட்டது காலம்!

வாஞ்: இங்கே அது நடக்காது. துரை: ஏன்? ரஷ்யாவில் ஏது தலைவிதி என்று பாடினானே. அவனைப்பாருங்கள் அவன் உடலிலே பூராவும் புண்ணாக இருக்கிறது. உள்ளே கோவிலில் ஆண்டவன் உருவாகி