பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

தோழி: சேற்றிலே செந்தாமரை இருந்தாலும் பரிப்பேன் என்றீர்களே?

சாம்: சரி என் மனது சரியில்லை. நாளை மாலையில் சந்திப்பதாகச் சொல்.

[துரைராஜ் ஒரு இடத்தில் படுத்திருக்கிறான். நல்ல தூக்கம். அழகூர் மடாதிபதியின் கையாட்களான கந்த பூபதியும். முருகதாசரும் துரைராஜைப் பார்க்கிறார்கள்.]

வாழ்வதிலே இன்ப துன்பம்-பாடல்

(பாடல் முடிந்தபின்)

கந்த: முருகதாசரே! தேடிப்போன மூலிகை காலிலே சிக்கிக் கொண்டது.

முரு: என்ன சேதி பூபதி?

கத்த: நாம் தேடியது கிடைத்து விட்டது. (சைகை செய்கிறார்)

முரு: சரியான பாத்திரம்!

கந்த: நம் திட்டத்தை இவன் ஒப்புக்கொள்ள வேண்டுமே. மறுத்து விட்டால்?

முரு: முதலில் எழுப்பும். பேசிப் பார்க்கலாம்.

கந்த: ஏய்! ஏய்! எழுந்திரு! எழுந்திரப்பா அதிர்ஷ்டம் வந்திருக்கிறது உனக்கு. (துரைராஜ கண்களை கசக்கி விட்டு பார்க்கிறான்) எழுந்திரு

துரை: காவியைக் கண்டவுடன் கன்னத்தில் போட்டுக் கொள்பவன் நானல்ல. போய் வாருங்கள்.

(மீண்டும் படுக்கப் போகிறான். தடுத்து)

கந்த: எழுந்து எங்களுடன் வாப்பா முக்கியமான விஷயம் பேசணும்.

துரை: சடாமுனிவரின் சபகோடிகளான உங்களிடம் எனக்கு என்ன விஷயம் பேசவேண்டியிருக்கிறது. போங்களய்யச் தொந்திரவு கொடுக்காமல்.