பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

[சிங்காரவேல் முதலியார் தன்வீட்டில் தனியே உலவிக் கொண்டு)
சிங்- மகான் சொன்னது பொய்யா! ஏன் இன்னும் வரவில்லை! புரோகிதர் சொல்லியிருக்கிறாரே - எனக்கு சொர்ணானுக் கிரஹமாமே (கதவுத் தட்டப்படுகிறது) இதோ வந்து விட்டார். (கதவை திறக்கிறார்)
(வாஞ்சிநாதர் ராம்சிங் என்பவனோடு வருகிறார்)
வாஞ்- வீட்டில் யார் இருக்கிறது!
சிங்- சந்திரா அத்தை வீடு சென்றிருக்கிறாள்.
வாஞ்- ராம்சிங் ஆரம்பிக்கலாம். முதலியார்வாள் கொண்டு வாருங்கோ!
சிங்- (தன் சொத்துக்களைக் காட்டி) ஐயரே! என் சொத்து பூராவும் இதுல இருக்கு. ஐம்பதினாயிரம் ரூபாய் ரொக்கமா இருக்கு லட்ச ரூபாய்க்கு மேல ஆபரணங்கள் இருக்கு,
வாஞ்- உட்காருங்க முதலியார்வாள்.
ராம்சிங்-ஓம்! மாகாளி. ஆங்கர், ஜாவ் ஜல்தி ஜாவ், பூஜை நடக்கும் — உட்கார். !மாகாளி! ஆங்காரி-ஓங்காரி ஜாவ் ஜாவ்! இவர் பேர்.
வாஞ்: சிங்காரவல் முதலியார்.
ராம் - சிங்காரவேல்--கும்பிடு.கும்பிடு. இந்தா கோழி முட்டை!
சிங்- எதுக்கு?
தரம் - சாப்பிடு!
சிங்- சாப்பிடவா சரி,[சாப்பிடுகிறார்]
ராம் - [ஐயரிடம்] நீ சாப்பிடு!
வாஞ்- எனை அது! பேர் என்ன சொன்னீங்க!
ராம் - கோழி முட்டை:
வாஞ் - கோழிமுட்டைய சாப்பிடவா!
ராம் - ஊம்! சாப்பிடு.
வாஞ்- [சாப்பிட்டுவிட்டு] நல்லா இருக்கு.
ராம் - நல்லா இருக்கா!
வாஞ்- இன்னும் ஒன்னு கொடு.
(ராம்சிங் சிங்காரவேலரின் முகத்தில் பச்சிலையைக் காட்டி மயக்கமுறச் செய்கிறான். முதலியார் சாய்கிறார்.)
வாஞ்: கொடுடா அவ்வளவையும் பத்திரப்படுத்திட்டு வர்றேன். (பணம் நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு)
வாஞ்- அடே! சிங்காரவேல் முதலி — உன் வாழ்வை மொட்டையடிச்சாச்சு,பணத்திமிர் பிடிச்சு ஆடினியில அழகூர்ல லலிதா போனா அப்படியிப்படினு என்னென்ன