பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59



வா : கிடக்கிறான் தள்ளுங்கோ! நேக்கு அவனோட தயவு எதுக்கு?

மாயே: சிங்காரமுதலிதான் உம்ம பேச்சைத் தட்டி நடப் பதே கிடையாதாமே.

வா :ஆமாம் -- அப்படித்தான்இருந்தான். கோயில் கட்டுடான்னேன். கட்டினான். கும்பாபிஷேகம் செய்டான்னேன். செய்தான்.

மாயே: ரசவாதம் செய்ததுகூட நீர் சொல்லித்தானாம்.

வா: யார் சொன்னா அப்படி இழுத்து வாரும் இப்படி. நான் ஜோட்டாலே அடிச்சுடுவேன். நான் தலைப் பாடா அடிச்சுண்டேன். வேண்டாம்டா-போதும் உனக்கிருக்கிற சொத்து. ரசவாதம் எதுக்குன்னா--என் பேச்சைக் கேட்டானா? தன் சொத்து கோயில் சொத்து பூறாவும் பறிகொடுத்தான். நல்லவேளையாக நல்லூர் சம்பந்தம் ஏற்பட்டது. இல்லையானா நாறிப் போயிருக்கும் அவனோட வாழ்வு!

மாயே: அதுவும் தங்கவில்லையே பாவம். தாலி அறுத்து விட்டாளே சந்திரா.

வா: அறாமல் என்ன ஆகும்? ஆயிரத்தெட்டு ரோகம் பிடிச்சவன்.

மாயே: அப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் சந்திராவைக் கொடுக்கச் சொன்னீரே!

வா: நான் சொன்னா இவன் புத்தி எங்கே போச்சுன்னேன். சிங்: (அலறியபடி) ஆ! அடப்பாவி-படுமோசக்காரா?(ஓடிவந்து வாஞ்சிநாதர் குரவளையைப் பிடித்துக் கொன்றுவிடுகிறார். மாயேந்திரன் தடுத்துக் கூறியும் பயனில்லை.)

மா:என்னய்யா கொன்றுவிட்டீர்

சிங்: (சுய நினைவு வந்து ஆ! அய்யோ! கொலைசெய்து விட்டேனே. ஐயா! (மாயேந்திரன் காலில் விழுந்து) என்னை தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

கவலைப்படாதீர்.புரோகிதரைக் கொன்றுவிட்டாலும் நீர் கொலைகாரனாக வேண்டாம். திகில் வேண்டாம். நான் காப்பாற்றுகிறேன் உம்மை. முதலில் புரோகிதர் வீட்டுக்குப்போய் சில உண்மைகளைக் காட்டுகிறேன். வாரும் என்னுடன். -0-