பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78 தது முயற்சிகளை கெடுத்தது. முறியடித்தது. முற்போக்கைக் அதோ ஓர் அழகு மங்கை; வயது பதினெட்டு; ஐயோ என்று அலறுகிறாள்; அவளைத் தொட்டுத் தாலிகட்டிய கிழவன் இறந்ததால், வாழ்வு ககிற்றே என்று வேதனை யால். விதியடி அம்மா விதி பலர் கூறுகிறார்கள். எரியும் கொப்பரையாக உள்ள அவள் மனதிலே எண்ணெய் ஊற்று கிறார்கள். இந்தக் கிழவனுக்கு சாக்காட்டை நோக்கி நடக்கும் வயோதிகளுக்கு என்னைத் தாரமாக்கினீர்களே தர்மமா, என்று துணிந்து கேட்டுவிடுகிறாள். அறிவழகி. 1 ஓர் அது உன் எழுத்தடியம்மா எழுத்து நீ வந்த வழி - உனக்கு உள்ள விதி- உடனே பதில் கிடைத்து விடுகிறது. எலும்பு முறியப் பாடுபடுகிறேனே, ஏழையாக வதை கிறேனே என்று ஓலமிடுகிறான் பாட்டாளி - நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தான் உடனே பதில் கிடைத்து விடுகிறது. கடைவீதிக்குச் செல்கிறோம், கையில் பணத்துடன் கடைவீதி போய்ச் சேருவதற்குள் கடைவீதியிலே உள்ள பண்டங்களே மாறிவிடக் கூடும். விலையும் வித்தியாசமாகி விடக் கூடும். அதுமட்டு மல்ல, எடுத்துச் செல்லும் காசும் செல்லுபடி யாகாததாகி விடலாம்; குறையக் கூடும்: மறையக் கூடும்; இதிலே எது - எப்போது நேரிடும் என்று தெரிந்துகொள்ள முடியாது. இவற்றில் எதையும் தடுக்க வும் முடியாது என்றால், கடைவீதி செல்பானின் கருத்தும் காரியமும் என்ன ஆகும்? இந்நாட்டு மக்களில், பெரும் பான்மையினருக்கு, வாழ்க்கைச் சந்தை இதுபோலவே அமைந்து விடுகிறது. முயற்சி பலனளிக்காதபோது, திட்டம் தகர்ந்துவிடும் போது, நோக்கம் ஈடேறாதபோது. என் முயற்சி பலிக்க வில்லை; திட்டம் ஏன் வெற்றி பெறவில்லை நமது கணக்கு ஏன் பொய்த்துப் போயிற்று; காரணம் என்ன என்று