பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89 எந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்வது என்று கண்டறியும் திறனும். கட்டடக் கட்டுக்கோப்பு முறையிலே. ஸ்தாபனம் இருக்கவேண்டும் என்ற நோக்க மும் நிச்சயமாகத் தேனை. வலிவுள்ள இரும்பு கர்டர் களும், வகை வகையான மரச்சாமான்களும், உயர்தரமான சிமிட்டியும், அழகான பித்தளைக் குமிழ்களும், அறைத் தெடுத்த சுண்ணாம்புக் குழையலும் தேவை. ஆனால், இவை களை எங்கெங்கு எந்தெந்த அளவில், எந்தெந்த முறையில் உபயோகித்தால், கட்டடத்தின் கட்டுக்கோப்பு சிறந்த முறையிலும் இருக்கும் என்பதை அறிந்து அமைக்கும் அமைப்பாளர்கள் தேவை- அவர்களால்தான் ஸ்தாபனங் கள் நல்ல முறையிலே அமையும். அமைந்த பிறகும், கட்டுக்கோப்பு கெடாதபடி பார்த்துக்கொள்ளும் திறம் இருக்கவேண்டும் - அக்கறையும் இருக்கவேண்டும். பெரியதோர் மாளிகையில், ஒரு சிறிய ஜன்னல் அவ் வளவு முக்கியமானதல்ல --அந்த ஜன்னல் இல்லாமற் போனாலும், மாளிகை இருக்கத்தான் செய்யும். அடிப்படை யும் குறுக்குச் சுவரும், மேல் அசைப்புப் சரியாக இருக்கு மட்டும், ஜன்னல் இருந்தாலும் எடுபட்டாலும், கெட்டா லும், மாளிகைக்கு ஒரு சேதமுமில்லை. ஆனாலும் மாளிகை யிலே அக்கறையுள்ளவர்கள், அந்தச் சிறு ஜன்னலைக் கூடத் தான் கவனித்துக் கொள்வார்கள் .- கெடாதபடி ஜன்னவை மட்டுமல்ல; அதன் கம்பிகளிலே ஒன்று கெட்டாலும், கவலைப்படுவர். ஏனெனில், ஜன்னலின் கம்பி கெட்டு, பிறகு அது எடுபட்டு, அதன் பலனாக ஜன்னல் கெட்டுக் கள்ளனே காற்று மவழயோ உள்ளே புகுந்து அதன் விளைவாக மாளிகைக்கு நஷ்டமும் கஷ்டமும் ஏற்பட்டு விடக்கூடுமே என்ற யூகம், மாளிகைக்காரருக்கு இருக்கும். எனவே, அவர் ஐன்னலின் கம்பி, மாளிகையின் அடிப்படை அல்ல என்ற போதிலும், அதனையும் தான், அக்கரையுடன்