பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 67

சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன்; கூடி முயங்கி.மயங்கிகின்று ஊடுவேன்; செவ்வாய்க் குருகுவேன்; உள்ளுருகித் தேடுவேன்; தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்; வாடுவேன்; பேர்த்தும் மலர்வேன்; அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்.

-திருஅம்மானை 17

இறைவனைத் தொழும்பொழுது ஏற்படும் உருக்கமே சிவன் கழல் சேர்க்கும் நீர்மைத்து ώ"ΤώΙΤ 2_GITLDITIT எண்ணினர் மணிவாசகப் பெருந்தகையார் கசிந்து கசிந்து உருகி உருகி நிற்கும் நிலையினை அவர்தம் திருப் பாடல்களில் காணலாம். பக்திவலையிற் படும் ஈசனின் திறத்தினைப் பின்வருமாறு கூறுவர்:

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து

உன் விரையார் கழற்குஎன் கைதான் தலைவைத்துக் கண்ணிர்

ததும்பி வெதும்பி, உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப்

போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன்:

உடையாய் என்னைக் கண்டுகொள்ளே.

-திருச்சதகம் : 1.

"என்னை அடைக்கலமாக ஏற்றருள் செய்தவனே! நின் பெருங் கருணைத் திறத்தை நினைந்து உடம்பு தானே மயிர்க்கூச்செறிந்து நடுநடுங்க, உனது வாசனை பொருந்திய திருவடிகளை வணங்குவதற்கு எனது கைகள் தாமே தலைமேற்கூம்பர் பெற்றுக் கண்களினின்று ஆனந்த வெள்ளம் நிரம்ப, மனமானது ஆர்வத்தால் வெப்பமுடைத்