பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சமயந்தொறும் நின்ற தையலாள்

தாக நிலையற்றவற்றின் பற்றுத் தானே நீங்கியொழிய உனக்கு வணக்கம், வெற்றி வெற்றி வணக்கம் என்றியம்பும் ஒழுக்கத்தையே நழுவ விடாது மேற்கொண்டு நிற்பேன். அடியேனைக் கண்பார்த்து ஏற்றுக் கொள்ளுக."

இவ்வாறு உடலும் உள்ளமும் உருகி நிற்கும் தனது அன்பு நிலையை மணிவாசகப் பெருந்தகையார் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

உற்றாரையும் ஊரையும் பேரையும் கற்றாரையும் வேண்டாது. குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தபிரானின் குரைகழற்கே கன்றை ஈன்ற தாய்ப்பசுவின் மனம்போலக் கனிந்து உருகுவதையே வேண்டி நிற்கிறார் திருவாசகம்

என்னும் தித்திக்கும் திருமறையைத் தந்த திருவாதவூரராம் மாணிக்கவாசகர்.

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன்

பேர்வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.

-திருப்புலம்பல்: 3.

"இவ்வாறு பக்திநெறியில் நிற்கும்பொழுது பேரின்பம் பெருகுகின்றது. தொன்றுதொட்டுச் சூழ்ந்துவந்த இருள் எங்கோ ஒடி மறைந்தது. அதனால் இடையீடின்றித் தொடர்ந்து வந்த துன்பம் அறவே அகன்றது. இருட்டறை யாக இருந்த இதயம் அன்பு மலிந்த பேரூராக மாறி விட்டது. இவையாவும் குருந்த மரத்தின் கீழமர்ந்த திருப்பெருந்துறைப் பெ ரு மா னி ன் திருவருளால்

விளைந்தனவே ஆகும்' என்கிறார் மணிவாசகர்.