பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

ஜெயில் சும்மா இருக்கிறதே! பிடி அண்ணாதுரையை, பிடி கவிஞரை, இங்கு பேசியவர்களையெல்லாம் பிடி, பிடித்தவர்களை யெல்லாம் சிறையில் போடு!” என்கிறார்கள். யாராகிலும் இங்குப் பேசாமல் இருந்தால், "ஏன் நீங்கள் பேசவில்லை. சர்க்கார் உங்களுக்கும் சிறைச்சாலையில் வரவேற்பு அளிக்கப்போகிறார்களாம். வாருங்கள் சிறைக்கு” என்று நம் அனைவரையும் அழைத்துச் சென்றாலும் செல்லலாம்.

இதுவரை எத்தனைப்பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதைப் பத்திரிகைகளிலே பார்த்தால் நன்கு தெரியவரும். வாழ வைப்பதாகச் சொல்லும் சர்க்கார் சிலரைச் சாகவும் வைக்கிறது. இதை விஷப் பாம்புகள் செய்யுமே? இதற்கு ஆயிரம் ஆயிரமாகச் சம்பளம் வாங்கும் மந்திரிகள் எதற்கு?

"8 Communists Hunted Down To-day 8Communists Shot Down Dead எட்டு கயூனிஸ்ட்கள் இன்று வேட்டையாடப்பட்டனர், எட்டுக் கம்யூனிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்” என்ற செய்தியை நீங்கள் சாதாரணமாகப் பத்திரிகைகளிலே காணலாம். விலங்குகளை வேட்டையாடுவதைப்போல கம்யூனிஸ்ட்களை சர்க்கார் ஏன் வேட்டையாடவேண்டும்? சர்க்காருக்கு வேட்டையாட மிருகங்கள் அகப்படவில்லையா? அல்லது மிருகங்களை வேட்டையாட சரிக்கார் அஞ்சுகிறார்களா?

‘எங்கள் காட்டிலே நாங்கள் புலியைக் கொல்லவில்லை; கொடிய மிருகங்களைக் கொல்லவில்லை; 8 கம்யூனிஸ்ட்களை இன்று கொன்றோம்” என்று கூசாமல் கூறுகிறார்கள், இதுவா காருண்யமுள்ள காங்கிரஸ் அரசாங்கம்! இப்படியெல்லாம் சுட்டுக் கொன்றாம் அடுத்த தேர்தலிலே வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

சென்ற ஆண்டு சியாங் கெய் ஷேக் இருந்த இடத்தில் இன்று மாசேதுங் இருப்பார் என்று யாரானும் எண்ணி