பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

குடியானவர்களிடம் காலிலே செருப்பணிந்து கொண்டு ”குடியானவர்களே! உற்பத்தியைப் பெருக்குங்கள் உற்பத்தியைப் பெருக்குங்கள்' என்று சொன்னால் எந்தக் குடியானவனும் உற்பத்தியைப் பெருக்கமாட்டான். முன்பு நான் சொல்லியதைப் போல 'உற்பத்தியைப் பெருக்கு' என்று சொல்வதற்கு முன்னர் குடியானவனின் சூழ்விலையை சர்க்கார் கவனிக்கவேண்டும்.

கவனர் ஜெனால் -- ராஜாஜி ஏர் உழுமுன் நமக்குக் கிடைந்தது 10 அவுன்ஸ் அரிசி. இப்பொழுது நமக்குக் கிடைப்பதோ 8 அவுன்ஸ் அரிசி!

வடநாட்டவர் தென்னாட்டவரை சுரண்டுவதை உடனே தடுத்தாக வேண்டும். வடநாட்டிலிருந்து தென் நாட்டைப் பிரிக்க வேண்டும். சர்க்காருக்கு ஒரு எச்சரிக்கை விடுகிறேன். அடுத்த மேதினம் வருவதற்குள் இங்குள்ள வெள்ளை முதலாளிகள் கையிலே உள்ள காபி, தேயிலை, முதலிய தோட்டங்களை சர்க்கார் தேசீய மயமாக்கி, ஸ்டர்லிங் கணக்குப் பார்த்து அவரவர்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்து விடவேண்டும். இதைச் செய்யுமா நம் சர்க்கார்?

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா முதலிய இடங்களிலே உள்ள முதலாளிகள் யார் யார் என்றுதான் தெரியும். பெல்ஜியம், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின் முதலிய வேறுநாடுகளில் இருக்கும் முதலாளிகள், பணக்காரர்கள் யார் யார் என்று அந்த மக்களுக்குத் தெரியாது.

உலக மார்க்கெட் இருக்கிறது அமெரிக்க முதலாளிக்கு! காமன்வெல்த் நாடுகள் தான் பிரிட்டனுக்கு இருக்கும் மார்க்கெட் முதலாளிகள் சுரண்டுவதற்கு இருக்