பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 - டாம் நூற்றதை குறிப்பிடும்பேற்பதும், - கட் ரோமாபுரிக்குத் தாம் அனுப்பி வந்த மிஷன் அறிக் கைகளில் தென்னாட்டில் ' நிலவி வந்த பஞ்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் பதினெட் டாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு பஞ்சத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, அந்தப் பஞ்சத் தில் பெற்றெடுத்த , குழந்தைகளை விற்பதும், கட்டிய மனைவிமார்களை அடகுவைப்பதும் நிகழ்ந்தன என்றும், 'பாதையோரங்களில் பட்டினிச் சாவினால் செத்துவிழுந்த பிணங்களுக்கு ஈமக்கிரியை செய்யக்கூட நாதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கை யொன்றில் ஓர் உள்ளமுருக்கும் நிகழ்ச்சியின் விவரமும் காணப்படுகிறது. பஞ்சத்தினால் . வாடி, பிழைப்பை நாடிச் சென்ற ஒரு கணவனும் மனைவியும், களைத்துப்போய், பாதையோரத்தில் படுத்துறங்கினார்களாம். இடையிலே விழித்தெழுந்த கணவன் எவனோ. ஒரு வழிப்போக்க னிடம் சிறிது அரிசியை வாங்கிக்கொண்டு, அதற்கு விலை யாகத் தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியை விற்று விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டானாம், விழித்தெழுந்த மனைவி தன் கணவனைக் காணாமல் தவித்து ? பின்னர் தன்னருகே உரிமை கொண்டாடி நின்ற நபரின் மூலம் தனது கணவனின் மன ஈனங்கெட்ட செயலைக் கேட்டறிந்தாளாம். கேட்ட மாத்திரத்திலேயே அவமா னமும் அதிர்ச்சியும் தாங்க மாட்டாமல் அங்கேயே திடீ ரென்று செத்து விழுந்து தன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு விட்டாளாம்! (மதுரை மிஷனரி 1709 ம் ஆண் டுக்கு எழுதியனுப்பிய ஆண்டறிக்கை).. - இத்தகைய கோர நிகழ்ச்சிகள் நடந்த பஞ்சத்திலும் கூட, மக்கள் பெருவாரியான அளவில் தாது வருஷம் பஞ்சத்தில் இறந்த மாதிரி இறக்கவில்லை. அப்படியென்றால் தாது வருஷப் பஞ்சத்தில் எத்தகைய கோர' நிகழ்ச்சிக ளெல்லாம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதை நாம் ' யூகித்துக்