பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசியர்கள்

119


அடிக்கிறாள் தெரியுமா? ஆனாலும் காதல் நீங்க சொன்னது மாதிரி வானைவிட பெரியதுதான். அவளை என்னால மறக்க முடியலையே சித்தப்பா.’

“வானம் என்றால் சூன்யம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. அப்படி அவள் சூன்யமாக ஆகியிருக்கலாம். அடிமன சோகத்தை வெளிமன ஆரவாரங்களாக காட்டலாம். ஒருவேளை நீ அவளை வெறுக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடந்து கொள்ளலாம்.’

முத்துக்குமாருக்கு மாயா மீது லேசாய் கழிவிரக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் குறுக்குத்தெருவையும், பிரதான தெருவையும் தாண்டி மெயின் ரோட்டுக்கு வந்துவிட்டது முத்துக்குமாருக்கு புரிந்தது. கூடவே, பொழுது புலர்வதற்கு அடையாளமாக அரசு பேருந்துகள் யந்திர சேவல்களாய் கூவுகின்றன. அதன் சக்கரங்கள் இறக்கைகளாய் தரையை அடித்தபடியே பறக்கின்றன. அதிக தூரம் நடந்து விட்டார்கள். அவ்வப்போது வீட்டுக்குப் போகலாம் என்று முரண்டு செய்த முத்துக்குமாரை, சித்தப்பா, உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டார். பிறகு அவனை நிறுத்தி அங்கே பார் என்று எதிர் திசையை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்.

ஆண்களும் பெண்களும் இடையிடையே சிறுவர்களுமாய் வி ரவிக் கலந்த ஒரு அழுக்குக் கூட்டம் எதிர்ப்படுகிறது. ஒவ்வொருவர் கையிலும் ஒரு இரும்பு கம்பி செங்குத்தாய் நிமிர்ந்து நிற்கிறது. தோளில் மண்வெட்டி கவ்விக் கொண்டிருக்கிறது. பெண்கள் கைகளில் ஒப்புக்கு கூட, ஒரு கண்ணாடி வளையல் இல்லை. செம்மண் துகள்களே குங்குமமாகின்றன. காது, மூக்குத் துவாரங்கள், சதைத் துளைகளாய் தோன்றுகின்றன. எங்கேயோ ஒரு இடத்தில் குழிபறித்து தங்களைத் தாங்களே புதைத்துக் கொள்ளப் போகிற மாதிரியான புழுதிக் கூட்டம். அல்லது புதை குழிகளில் மரித்தெழுந்தது போன்ற செம்மண் துகள்கள் அப்பிய மனித மந்தை, படையெடுப்பு வீச்சில் நடைபோடுகிறது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. ஆனாலும், அந்த மூன்று அடுக்கு வரிசை கலையவில்லை. வேகவேகமாய் நடக்கிறார்கள். சித்தப்பா, அவன் கேளா காதுக்கு சத்தம் போட்டே பேசுகிறார்.