பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலவரப் போதை

129


லாடம் அடித்து முடிக்கப்பட்ட காளை மாடு, துவக்கத்தில் அசைந்தாடி, அப்புறம் துள்ளிக் குதிப்பதுபோல், பன்னீர், ஓணான் செடிகளும், அவற்றிற்கு இடையே மஞ்சள் பூ பூத்த பூசணிக் கொடிகளும் சுற்றி வளைத்த தனது வீட்டிற்கு முன்னால் நின்றான். பின்னர் சிறிது தொலைவில் நடந்தான். கதிரடித்து, கதிரடித்து வழுக்கையான ஒரு பொட்டலை, ஆடுதளம் போல் அளப்பரிய ஆனந்தத்தோடு பார்த்தான். பின்னர், இந்த பொட்டல் வட்டத்தின் மையத்தில் நின்றுகொண்டு, கூட்டத்தை பன்னீர் ‘சரணமாய்ப் பார்த்தான். ஒரே ஒரு நிமிடம். மறுநிமிடமோ

பன்னீர், தனது இரண்டு கரங்களாலும் தலையை விடாமலேயே அடித்தான். விடு விடென்று அடித்தான். மத்தளத்தை மாறி மாறித் தாக்கும் கம்புகள்போல், கைகளை ஆக்கிக்கொண்டான். பின்னர் வலி பொறுக்க முடியாமலோ என்னவோ, தலைமுடியை தாறுமாறாய்ப் பிய்த்தான். காதுகளை முத்துச் சிப்பிபோல் மூடிக்கொண்டு, பள்ளிக்கூட ஆசிரியர் மாணவர்களை திருகுவதுபோல் திருகினான். இதற்குப் பிறகு, கைகளை கழுத்தின் இருபக்கமும் கொண்டுவந்து, அதை நெறித்தான். கழுத்தை விடுவித்துவிட்டு, கன்னங்களை தடாலடியாய் அடித்துக்கொண்டான். பின்னர், இரண்டு கரங்களையும் தலைக்குமேல் கொண்டுபோய், திப்பாய்ச்சி அரிவாட்களைப்போல லேசாய் வளைத்து, விரல்களை ஒருமுனையாக்கி, ஒன்றை ஒன்றை ஆழம் பார்ப்பதுபோல், முன்னாலும் பின்னாலும் ஆட்டிக்கொண்டான். இந்த ஆட்டம் முடிந்த முப்பது வினாடிகளில், இரண்டு கைகளும் ஒன்றுடன் ஒன்று போரிட்டன. ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டன. வலதுகை, எதிரிக்கையான இடதுகை விரல்களை பின்புறமாய் வளைத்தது. வளைபட்ட இடதுகை விரல்கள், திமிறி வெளிப்பட்டு, வலது கையின் மணிக்கட்டில் ஆழப்பதிந்து, ரத்தக் கசிவை ஏற்படுத்தின. இந்த அடாவடியான அடிதடிக்கு அவன் வாய் தாளலயமாய் இப்படிப் புலம்பியது.

“படுகளத்தில எதுக்குடா ஒப்பாரி...? அத்தை மகன்னாலும், அடுத்த ஊர்க்காரன்தானடா? முகம் பார்த்து பின்வாங்குறதுக்கு