பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

சமுத்திரக் கதைகள்


இப்படிப் பட்ட அந்த பயபக்திப் பெண்கள், அன்றும் மலையடிவார அம்மன் கோவிலுக்குப் போய்விட்டு, மாலையில் காலக் கட்டாயத்தைக் கருதி, அவரச அவரசமாய் நடந்து, தறவாடு வீட்டின் நடுமுற்றத்தில் வந்த பிறகுதான், சிறிது நிதானித்து நின்றார்கள். வண்ண வண்ண மலர்களால் “நெய்யப்படும்” ஒணக்கம்பளம் நிமிர்ந்து பார்ப்பது போன்ற ஒட்டு மொத்தமான அழகு தோரணை.

மொத்தம் எட்டுப் பெண்கள். முதிய தாயான குஞ்சம்மா, சித்திக்காரிகள் வேக்காளி, குன்னிக்குட்டி. எஞ்சிய ஐவர் உடன்பிறப்புகள் அல்லது ஒன்று விட்ட சகோதரிகள். எழுபது முதல் இருவது வரையான வயதுக்காரிகள். இன்னென்ன வயதுகளில் இப்படி இருந்தோம், இருப்போம் என்று அத்தனைப் பெண்களும் தத்தம் வயதுக்கேற்ப ஏழு பெண்களையும் கண்ணாடியாய் ஆக்கிக் கொள்ளலாம். முன் தலைகளில் வலதுபக்கம் தலைமுடியை பந்து போல் சுருட்டி ஒரங்கட்டி, அதன் அடிவாரத்தில் பூவேலி போடப்பட்ட கொண்டைக்காரிகள். தொள்ளையாகவோ, மொக்கையாகவோ இல்லாமல், காலணா பரிணாமத்திற்கு ஒட்டை போட்ட காதுகளுக்குள் உருளை வடிவமான காதணிகளையும், கழுத்து, கை, மார்பு, கால்களை மறைக்கும் பொன் நகைகளையும் கொண்ட நடமாடும் நகையலங்காரிகள்.

அந்த முற்றத்தில் அரைக்கால் நாழிகை இளைப்பாறி முடித்துவிட்டு, அந்த எட்டு பெண்களில் ஏழு பேர், ஆண்கள் நுழையக் கூடாத மாடியில் உள்ள தங்களது சயன அறையை நோக்கி, கிழக்குப் பக்கமாக உள்ள ஏணிப்படிகளில் ஏறியபோது, கடைக்குட்டியான பாருக்குட்டி, கண்ணுக்கு எதிரே தொலைவில் உள்ள கொல்லைப்புறத்தில் தெரிந்த காரணவான் எனப்படும் மூத்த தாய்மாமனையும், அம்மாயி என்று அழைக்கப்படும் அவன் மனைவியையும், படபடத்து பார்த்தாள். மடித்து வைத்த முழங்கை போன்ற ஏணிப்படிகளின் திருப்புத்தளத்தில், தாய்க்காரி குஞ்சம்மா, அவளை வாய்விட்டு கூப்பிட்டபோது, பாருக்குட்டி கொல்லைப்புறம் தாவிய கண்களை எடுக்காமலே பதிலளித்தாள்.