பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 47

ஊழியர்கள் , க ைட சி யர் க ளான பொது மக்க ளி டம் தங்களைத்தாக்கிய எஜமானத்துவத்தை வட்டியும் முதலுமாகக் கொடுக்கிறார்கள். அதிகாரிகளின் கால்களைப் பிடித்துக் கொண்டே சாதாரண மக்களின் தலையில் கால் பதிக்கிறார்கள். ஆகையால் இந்நாட்டு மன்னர்களாக கருதப்படும் மக்களுக்கு இவர் க ள் சக் க ர வர் த் தி யா கி றார் க ள் . எ ன் றாலு ம் கூ ட் டு ற வுத் துறை யு ம் , ஊ ரக வள ர் ச் சி த் து ைற யு ம் ஜனநாயகப்பட்டும், மக்களை ஜனநாயகப்படுத்தியும் வருகின்றன. இது ஒரு மகிழ்ச்சிக்குரிய மாறுதல், தமிழ்நாடு அரசு ஊழியர் மாநில சங்கம் த ன து உறுப் பினர் க ைள ச மூ க ப் பிரச்சினைகளிலும் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே அரசின் கீழ்மட்ட ஊழியர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்த வேண்டியது, அவசர அவசிய மாகிறது. இத்தகைய ஊழியர்களுக்கு சமூகப் பொறுப்பில் பயிற்சி அளிக்கவேண்டும். எளிமை இல்லாமல் நேர்மை இல்லை என்று தத்துவார்த்தமாக போதி க்க வேண்டும். இதற்கு இவர் களை மே லிட அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து, சட்டமே சகலமும் என்ற மனோத ளத் தி ற்கு கொண்டு வர வேண்டும். வெளிப்படையாகச் சொல்லப்போனால், தங்களை ஊழலில் இரு ந் து விடு வித் துக் கொண் டே , ஊ ழ ல் அரசியல்வாதிகள்-அதிகாரிகளுக்கு எதிராக ஒரு அறப்போரை மேற்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டும். பல்வேறுஅரசு ஊழியர் சங்கங்கள், இதற்கு ஆவன செய்ய வேண்டும். தங்களது உறுப்பினர்களை அவர்களது நியாயமான சுதந்திரத்துக்கும், பொதுமக்களின் அடிப்படை சுதந்திரத்தையும், சுயமரியாதையும் பேணிக்காக்கத் தயார்படுத்த வேண்டும்.

இந் த த் தோழமை வந்து வி ட் டால் , கீழ் மட்ட ஊழியர்களாலயே மேல்மட்ட கொள்ளைக்காரர்களைத் தூக்கி எறியமுடியும். கரையான்கள் ஒரு கட்டத்தில் சிறகுமுளைத்த ஈசல்களாவதுபோல், சுயநலப்பொந்தில் லஞ்சக் கரையான்களாய் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும் இவர்களை சமூகநீதித்தளத்திற்கு கொண்டு வந்தாகவேண்டும். இல்லையானால் சுதந்திரம் என்பது இவர்களுக்கும், இவர்களைச் சார்ந்த சாதாரண மக்களுக்கும் தொடர்ந்து கேலிக் கூத்தாகவே நிலவும்.

தினமணி தலையங்கப் பக்கக் கட்டுரை - 1999,