உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட
புகழ்பெற்ற திரைப்படங்கள்
சமூகத்தில் விஞ்ஞான விரோத
மான கருத்துக்களை பரப்பி
வருகின்றன. கிராமங்களை
கொச்சைப் படுத்துகின்றன.
“ஈவ்டீசிங்” எனப்படும் பெண்கள்
மீதான வன்கொடுமையை
ஊக்குவிக்கின்றன. ‘ரங்கா’, ‘பில்லா’ போன்ற
நாடறிந்த கொடியவர்களின்
பேரில் திரைப்படங்கள்
எடுக்கிறார்கள். ஒருவனை
வீரனாக்க ஒன்பது பேரை
பேடியாக்கி தமிழகத்தையே ஒரு
மனநோயாளி மாநிலமாக மாற்றி
விட்டார்கள்.

திரைப்பட
அபத்தங்களும்
ஆபத்துக்களும்...

அண்மைக்காலமாக, ஒருவகை
நிகழ்ச்சிகளை செய்திப் பத்திரிகை
களும், வாரப் பத்திரைகைகளும்,
மேலே பார்த்தால் சூடாகவும்,
விலக்கிப் பார்த்தால் சுவையாகவும்
சித்தரித்து வருகின்றன. ஈவ்டீசிங்
என்றும் தலைப்பிடுகின்றன.
எந்தக்குற்றமும் செய்யாத மாணவி
சரிகாவின் மரணத்தையொட்டி
பதினைந்து நாட்கள் காரசாரமாக
பேசப்பட்ட விவகாரம், பேப்பர்
குப்பைகளில் போடப்பட்டது.
இப்போது மீண்டும் அவை
பரபரப்பாகப் பேசப்படுகிறது.
அடங்கிக்கிடந்த வம்பர்கள்
மீண்டும் கை வரிசையையும், வாய்
வரிசையையும் காட்டுவதே
காரணம்.

பாதிக்கிணறு தாண்டுதல்

ஒரு அனாதரவான
பெண்ணை, கிண்டலால், கேலி
யால் அவமானப்படுத்தும்
கொடிய குற்றத்தை “ஈவ்டீசிங்”
என்று சொல்வது பொழுது
போக்குச் செய்திகளே. முதலில்
இந்தக் குற்றத்திற்கு பெண்
கொடுமை அல்லது பெண்களை