உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அரவாணிகள் அல்லது
அலிகள் ஆண் உடம்புகளில்
சிறைபட்ட பெண்கள். கர்ப்பப்பை
தவிர்த்து ஒரு பெண்ணுக்குரிய
அத்தனை உணர்வுகளும்
கொண்டவர்கள். ஊனமுற்றோருக்காக ஓரளவு
உதவிகள் செய்து வரும் மத்திய,
மாநில அரசுகள், இந்த
பாவப்பட்ட மக்களுக்கும் வேலை
வாய்ப்பில் இட ஒதுக்கீடு,
இலவச வீட்டுமனை, மருத்துவ
வசதி போன்றவற்றை செய்ய
வேண்டும். காரணம் இவர்களும்
பாலியலில் ஊனப்பட்டவர்களே.

அரவானிகள்

ஆணின் உடம்பில் சிறை
பட்டிருக்கும் பெண்களைப்
பார்த்திருக்கிறோமா? கேள்விப்
பட்டிருக்கிறோமா?

அனைவரும்
பார்த்திருக்கிறார்கள். ஆனால்
கேள்விப்பட்டதில்லை
எங்கேயாவது ஒரு இடத்தில்
குறிப்பாக கடைகண்ணிகளில்,
கூத்துக்களில், கடற்கரைகளில்,
நகரப் பேருந்து நிலையங்களில்
இவர்களைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இவர்கள்தான், ஆணு
டம்பில் அடைபட்டிருக்கும் பெண்
கள் என்பதை அறிய மாட்டோம்.
இவர்களைப் பார்த்ததும், நயத்தகு
நாகரிகமான வர்களுக்கும்
உதட்டோரம் ஒரு கேலிச் சிரிப்பு
ஏற்படும். சிலர் ஒதுங்கிப்
போவார்கள். பலர் ஒதுக்கிப்
போவார்கள். கீழ்மட்ட ரவுடிகளும்,
கேடிகளும் இவர்களை
“பொட்டை” என்பார்கள். ஆனாலும்
இவர்கள் பொட்டைகள் அல்ல.
பலர் நினைப்பது போல், பாலி
யல் உணர்வு இல்லாத ஆண்மை
யற்றவர்களும் அல்ல. ஓரினச்
சேர்க்கையில் ஈடுபடுகிற
ஆண்களும் அல்ல.