பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 75

குரோமோசோம்களும் இணையும்போது முட்டை யின் பெண்ணியல்பும் ஒரளவிற்கு இருக்கும். இதனால்தான் முழுமையான ஆண் என்றோ, முழுமையான பெண் என்றோ, எவரும் கிடையாது. ஒருவரை ஆண் தன்மை மிஞ்சியவர் என்றும், ஒருத்தியை பெண்தன்மை மிஞ்சியவள் என்றுமட்டுமே அழைக்கலாம். ஆனாலும் இந்த மிஞ்சிய தன்மைக்கு ஏற்ப முட்டை ஆண் வடிவத்தையோ அல்லது பெண்வடிவத்தையோ பெற்றுவிடுகிறது. ஆளுமை மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இரண்டும் கலந்ததாக இருக்கும். ஒரு சிலர், ஆணிலிருந்து பெண்ணாகவோ அல்லது பெண்ணிலிருந்து ஆணாகவோ மாறியிருக்கிறார்கள். குறைவாய் உள்ள ஆண் அல்லது பெண் தன்மை இன்னொரு தன்மையை அமுக்கி விட்டு ஒரு கட்டத்தில், மேலோங்கி விடுவதே காரணம். *

என்றாலும், இந்த அலிகள் இவர்களோடும் சேர்த்தியில்லை. இவர்கள் மானுடத்தின் மூன்றாவது பரிமாணம். ஆணுடம்பில் பெண்ணுமாய், பெண்ணுடம்பில் ஆணுமாய்- இந்த இயல்பு எப்போதும் மாறமுடியாததாய் இருப்பவர்கள். நமது பக்தி இலக்கியங்கள் ஆண்டவனை குறிப்பிடும்போது ஆணாகி, பெண்ணாகி, அலியாகி என்கின்றன. இந்த அலிகள் மனதளவில் பெண்க ள் அல்லது ஆண் கள். பெண் ணு டம்பி ல் ஆண்களாயிருக்கும் அலிகள் குறைவு என்பதால் அவர்களைப் பற்றி இங்கே பேசப்படவில்லை.

இவர்களுக்கு, ஒரு பெண்ணுக்குரிய அத்தனை உடலுறவு ஆசைகளும், ஆசாபாசங்களும் கொண்டவர்கள். ஒரே ஒரு வித்தியாசம் இவர்களுக்கு கர்ப்பப்பை கிடையாது. ஆகையால் இவர்களால் குழந்தை பெறஇயலாது. என்றாலும் தங்களை முழுமையான பெண்களாக ஆக்கிக் கொள்ள, அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். ஹார்மோன் ஊசி போட்டு மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். என்றாலும், ஒரு பெண்ணைப் போலவே மனதுக்குப் பிடித்த ஆணுடன் உடலுறவு கொள்ள விரும்பும் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் எள்ளி நகையாடப் படுகிறார்கள். வீட்டிலும் இடம் இல்லாமல், நாட்டிலும் இடம் இல்லாமல் நிர்க்கதியாகும் இவர்களுக்கு, வயிற்றுப்பிழைப்பிற்கு, விபசாரத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது. கையும் களவுமாக பிடிபடும்போது இவர்களது ஜோடிகளைப் பிடிக்காமல், இவர்களை மட்டுமே காவல் துறை கைதுசெய்கிறது. இவர்கள் மீது விபசாரத் தடை சட்டத்தின்கீழ் வழக்கு போடமுடியாது. ஆகையால் நமது வீரதீரக் காவல் துறையினர், இவர்கள் கஞ்சா உள்ளிட்ட பல போதைப் பொருள்களை விற்பதாக