பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

9


 தங்கள், போரில் மாண்ட மாவீரர்களின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்து, இன்று பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் வீரப் பட்டயங்கள், மிகப் பழைய போராயுதமான வில், அதில் நாணேற்றி அறுந்துவிட்ட கயிறுகள், வில்லிலிருந்து புறப்பட்டு குற்றவாளி கோட்டைச் சுவற்றில் முட்டி கூர்மழுங்கிப் போன அம்புகள், வில்லில் நாணேற்றும்போது ஏற்பட்ட ரீங்கார சத்தத்தை மண்டலமெல்லாம் பரவச்செய்த அணுக்களின் அணுக்கள். எதிரிகளின் குதிரைக் குளம்படிப்பட்டு உடைந்துபோன மண்டையோடுகள். சாம்ராஜ்யாதிபதிகள் கையொப்பமிடா முன்னம் களம்புகவேண்டி வந்ததால் அரை குறையாக விடப்பட்ட கையெழுத்தில்லாத சாசனங்கள், சமர்க்களத்தில் சலிக்காது போரிட்டும் வெற்றித் தோல்விகள் தெரியாததால் வெள்ளைக் கொடி காட்டி, விட்டனுப்பிய சமாதான அறிக்கையின் கையெழுத்துப் பிரதிகள், படைகள் எவ்வழி செல்ல வேண்டுமென்பதை சாலையின் மரங்களில் செதுக்கப்பட்டிருந்த எழுத்துக்கள், தளகர்த்தனுக்கு சேதி சொல்ல அனுப்பட்ட புராவினங்களின் சந்ததிகள்.

ஆள்பவன் உயிரோடிருக்கும்போதே அவன் பாதுகையை வைத்தாண்டு, தம்பியை ஏமாற்றியதாகச் சொல்லும் பாடகனின் கற்பனையில் உதித்து இன்று தெய்வீகத் திருவிளயாடல் எனப் போற்றப்படும் ஏடுகள், நா வல்லோன் தன் கற்பனையால் உண்டாக்கிய காகிதக் கோட்டைகள், கற்பனை உலகங்கள், கருத்துக்கே எட்டாத கனவு உலக சாம்ராஜ்யங்கள். சென்னியில் கல்லேற்றி சினம் தீர்த்த மன்னன் மீண்டும் தன் பகைவரை மன்னித்து விருந்தளித்ததால் ஏற்பட்ட விபரீத விளைவுகள்