43 சலோம்
என்பதில் ஐயம் இல்லை. அது மறைந்தது... இல்லை, இல்லை... மீண்டும் அதோ.. அதோ (காதுகொடுத்துக் கேட்கிறான்) உனக்குக் கேட்கவில்லையா? சிறகு அடித்துக்கொள்ளுவது போன்ற ஒசை.
மன்னி :
ஒன்றையும் காணோம். உங்களுக்கு உடம்பு ஒழுங்கில்லை
போலும், உள்ளே போவோம்.
மன்னன் :
இல்ல்ை, எனக்கு உடல்நலக் கேடு இல்லை; உன்னுடைய
மகளுக்குத்தான் நோய். அவளுடைய முகத்தைப் பார். மிகவும்
வெளிறி இருக்கிறது.
மன்னி :
அவளைப் பார்க்கக் கூடாது என்று உங்களிடம் சொல்ல
வில்லையா?
மன்னன் :
கிண்ணத்திலே மது ஊற்று (மதுவைக் கொண்டுவருகிறாள்
மன்னி) சலோம், இங்கே வா, என்னுடன் கொஞ்சம் மது அருந்து.
இது வெகு இனிமையான மது. சீசரே எனக்காக அனுப்பி இருக்
கிறார். உனது சிவந்த மெல்லிய உதடுகளை இந்த மதுவிலே
தோய்த்துக்கொள். -
சலோம் :
எனக்கு வேட்கை இல்லை, அரசே!
மன்னன் :
அவள் என்னவாக விடை சொல்லுகிறாள், பார்த்தாயா? உன்னுடைய மகள் சொல்லுவதைக் கேட்டாயா?
மன்னி :
அவள் சொல்லுவது சரி. நீங்கள் ஏன் எப்பொழுதும் அவளையே பார்க்கிறீர்கள்?