பக்கம்:சாமியாடிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

159

சாமியாடிகள் 159

நல்லா அனுபவிக்கோம். ரஞ்சிதம். கரும்பட்டையான் ஆம்புளயும், செம்பட்டையான் ஆம்புளையும் போட்டி போட்டால் காத்துக் கருப்பனுக்கு என்ன.. வந்துட்டு. நாங்க இப்போ பீடி சுத்தப் படாதாம். அஞ்சாறு வருஷமா செய்யுற வேலையை எப்பிடி நிறுத்திட்டான் பாரு."

"ரஞ்சிதம் நீயாவது பூவு வித்துப் பிழைக்கே. நாங்க என்ன பண்ணுவோம்.? பீடிய பிடிச்ச கையால மம்பெட்டிய பிடிக்க முடியாது. இலைய சுருட்டின கையால புல்லு வெட்ட முடியாது. இதவிட அந்த கரிமுடிவான் எங்கள ஒரே வெட்டா வெட்டியிருக்கலாம்."

ரஞ்சிதம், அந்தப் பெண்களை இரண்டு பக்கமும் கை நீட்டி இரு முனைகளிலும் நின்றவர்களின் கரங்களைப் பற்றியபடியே சாதாரணமாகப் பேசினாள்.

"மனுஷனையும், மனுஷியையும் பிரிச்சுப் பார்த்தால், அப்புறம் கையி காலுன்னும் பிரிக்க வேண்டியது வரும். அன்னிக்கு என்னை சாதியச் சொல்லி விரட்டுனான். இன்னைக்கு ஒங்கள குடும்பத்த சொல்லி விரட்டுறான். நாளைக்கு கரும்பட்டையான் பொண்ணுவள விரட்டுவான். அப்புறம் காத்துக் கருப்பன் குடும்பத்துல முதல் சொக்காரன சேர்த்துட்டு, ரெண்டாவது சொக்காரன விரட்டுவான். அப்புறம் முதல் சொக்காரனுவனுள்ல அண்ணன் தம்பின்னு ஏத்துக்கிட்டு சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளை விரட்டுவான். பிறகு தன்னைத்தானே மட்டும் வச்சுக்குவான். இப்படிப் பட்டவனுவள முதலில் விரட்டுனாத்தான் நம்மள மாதிரி தொழிலாளிங்க ஒன்றாய் சேரமுடியும்.”

"இப்போ வேல இல்லாம வீதியில நிக்கோமே. ரஞ்சிதம்."

"கவலைப்படாதிய குட்டாம்பட்டில கண்ணாடிக்காரன்னு ஒருத்தர் ஏற்பாட்டுல பீடி சுற்றும் கூட்டுறவு சங்கம் வந்திருக்கு. அதுல பீடி சுத்தி பிழைக்கலாம். இப்போவாவது நமக்கு சங்கம் தேவைன்னு தோணுதா."

"அதுல என்ன சந்தேகம். இவன விடப்படாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/161&oldid=1243678" இலிருந்து மீள்விக்கப்பட்டது