பக்கம்:சாமியாடிகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

175

சாமியாடிகள் 175

"அப்படி ஆகப்படாது. கரும்பட்டையான் கூட்டம் அம்மன் கொடை முடிஞ்சதும், கோலவடிவ மெட்ராஸ்ல கொடுக்கப் போறாங்க. அப்படி கொடுத்துட்டா ஒங்க காத்துக் கருப்பன் குடும்பத்தை பொண்ணுக்கு வீங்கின்னு சொல்லப் போறனுவ.. தேங்காய உருட்டிக்கிட்டு ஒடுன நாயின்னு ஆகிடாதிய."

"நீங்க சொல்றதும் சரிதான். எல்லாம், பற்குணத்தால வந்த வினை. இப்போ என்ன செய்யலாம்."

"இப்பவும் லேட்டுடல்ல. அம்மன் கொடைக்கு முன்னயே கோலவடிவுதான் பொண்ணு. அக்கினிராசாதான் மாப்பிள்ளன்னு ஒரு ஏற்பாடு செய்துடுங்க. இல்லாட்டா ஊரு ஒங்கள இளப்பமாய் நெனைக்கும்."

"வேணுமுன்னால் பாருங்க மயினி. ஒரு நாள் மட்டும் பொறுங்க. நாளைக்கே தெரியும். கோலவடிவு பொண்ணு. அக்கினிராசா மாப்பிள்ள. இந்த ஆடில ஏற்பாடு. வார ஆவணில கல்யாணம். இப்பவே போயி. பற்குணத்தையும், ராமய்யாவையும் உலுக்குறேன் பாருங்க."

"நல்ல காரியம் நடந்தா சரிதான்."

அலங்காரி, குலவையிட்டாள்-கொக்கரக்கோ என்பது மாதிரி.

18

உச்சி வெயில் உச்சத்த பிடித்த வேளை.

பழனிச்சாமி அசந்து கிடந்தார். பாக்கியம், அவரையே பார்த்தாள். வயிறு கொலுக்காய் கிடந்தது. சொன்னாலும் கேட்க மாட்டார். சோறுதான் சாப்பிடாண்டாம். காபியாவது குடிக்கலாம். பசியை அடக்கும். கேட்டால்தானே. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/177&oldid=1243705" இலிருந்து மீள்விக்கப்பட்டது