பக்கம்:சாமியாடிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

203

சாமியாடிகள் 203

பெருமைப்படுத்தி ஒரு பொண்ணு சீரழியுறத பார்க்கதவிட, நம்மையே சிறுமப்படுத்தி, ஒருத்தியக் காப்பாத்தறது நல்லது. சரி. அக்னி ராசாவுக்கு அவளத்தான் முடிவு கட்டியாச்சே. இனிமேல் கோலவடிவு மாறிடுவாள். எப்டிச் சொல்ல முடியும்? நேத்து பகலுல அலங்காரி கிட்ட பேசிட்டுப் போனாள். இந்த விாடாப்பூ மூலம் அவளுக்கு புத்தி சொல்லணும். எங்கிட்டயாவது கொஞ்சம் பேசச் சொல்லனும். அவளுக்கு எது நல்லதோ அது கிடைக்க ஒத்தாசை செய்யத் தயார்னு உறுதி சொல்லி அனுப்பணும். துளசிங்கம். நல்லவன் இல்லன்னு நயமாச் சொல்லனும்:

ரஞ்சிதம், வேகமாக நடந்தாள். எதிரே அவளை மோதுவது போல் பாய்ந்த வேனில் இருந்து தப்பிப் பிழைக்க துள்ளிக் குதித்தாள். அந்த வாகனத்தை கோபமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, பின்னர் கொண்ட குறிக்கோளைக் கருதி, வாடாப்பூவை நோக்கி எட்டி நடந்தபோது .

பீடி சுற்றும் பெண்கள் கூக்குரல் கேட்டது. மெள்ளப் போய்க் கொண்டிருந்த வேன் மீது, அந்தப் பெண்கள் கற்களையும், கட்டிகளையும் எடுத்து எறிந்தார்கள். சில பெண்கள், அந்த வேனுக்குப் பின்னால் ஒடினார்கள். சத்தம் கேட்டுத் திரும்பிய ரஞ்சிதம், அந்தப் பிரச்சினை அவசரப் பிரச்சினை என்பதால், வாடாப்பூவைக் கையாட்டி போகச் சொல்லிவிட்டு, முருகன் கோவில் முன்னால் ஒடி வந்தாள். அந்த வேனோ, ஒரு மூலையில் திரும்பியது. அதன் பின்னால் ஒடிய பெண்கள் மூச்சிறைக்க ஓடி வந்தார்கள்.

"பாரு ரஞ்சிதம். இந்த மெட்ராஸ் பயலுவள. கிணத்துல குளிச்சிட்டு வேனுல போற பயலுவ சும்மா போக வேண்டியதுதான. எங்களப் பார்த்து கையாட்டிட்டுப் போறாங்க."

"ஒருவேளை சிநேகிதமாய்." "அப்படி என்ன சினேகிதம் இவனுவ கூட அப்டி இருந்தால் அதோ கதிரறுக்கப் போவுதே சேரி சனங்க. ஆம்புளைங்க அவங்களப் பார்த்தும் கையாட்டி இருக்கனுமுல்லா..?”

"இதுல்லாம் திமுறு ரஞ்சிதம். நாம என்னவோ அவங்களைப் பார்த்து மயங்குறதா தூம பயலுவளுக்கு ஒரு நெனப்பு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/205&oldid=1243750" இலிருந்து மீள்விக்கப்பட்டது