பக்கம்:சாமியாடிகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

205

சாமியாடிகள் 205

"புராணத்தை தலைகீழாய் மாத்தப்படாது பாரு. எலி டாக்டர் மச்சான் சூதோட சொல்லுறதை புரிஞ்சுக்கணும்."

"அப்டிப் பார்த்தால் யாரு சூதில்லாதவிய..? நீ மட்டும் ஒங்க அண்ணாச்சி மவனுக்கு கோலவடிவ காதும் காதும் வச்சாப் போல நிச்சயம் செய்யணும். அதுக்காவ எங்களை பயித்தியக்காரனா ஆக்கனுமோ..?”

"முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடாத."

"ஒனக்கு வேணும்போது சொக்காரன். வேண்டாத போது பங்காளி. கோலவடிவு அக்னி ராசாவுக்கு முடிக்கலாமான்னு சொக்காரன் கிட்ட கேட்டியா.

"சரி. இப்போ கேட்கேன். ஒன் சொல்லுக்கு கட்டுப்படுறேன்."

"இப்ப முக்கியம் கோலவடிவு இல்ல. மாரியம்மன் தான். சுடலைமாடன். இங்க வரப் போறார்."

“வந்தா காலை ஒடிப்பேன்."

"ஒடிக்கிற கைய வெட்டுவேன்."

எலி டாக்டர் ரசிக்கும்படியாய் காத்துக் கருப்பன்கள் கட்சி பிரிந்து சண்டை போடப் போனார்கள். அப்போது பிடிப் பெண்களிடம் ஒரு கூச்சல், எல்லோரும் சண்டையை விட்டுவிட்டு அங்கே ஒடினார்கள். 'காரை வீட்டுக்காரி பீடிப்பெண் ஒருத்தி கத்த, மற்றப் பெண்கள் "மாஸ்டர்கள் வந்த வேனை, கைகோத்து, மறித்து நிறுத்தினார்கள்.

"இந்தப் பயலுவ அப்பவும் எங்களப் பார்த்து கையாட்டுறானுவ. இப்பவும் கையாட்டுறானுவ... எச்சிக்கல பயலுவ. என்ன நெனச்சு கிட்டாங்கன்னு கேளுங்க... சட்டாம்பட்டி பொண்ணுங்கன்னா இளக்காரமா. அவங்கள என்னன்னு கேளுங்கய்யா."

இதற்குள் வேனைச் சுற்றி கூட்டம் மொய்த்தது. திருமலையும் கூட்டத்தில் ஒருத்தன். அதுதான் சாக்கு என்று வேனின் முன் சக்கரங்களில் காற்றைப் பிடுங்கி விட்டான். ஒருத்தர், வேனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/207&oldid=1243754" இலிருந்து மீள்விக்கப்பட்டது