இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
போ, போ, புத்தி கெட்டவனே,
பிழைப்பது இப்படித் தானோ நீ!
மரத்தைக் கீழே சாய்ப்பதுவாம்!
வண்டியில் பிறகு ஏற்றுவதாம்!
என்றன் சொல்லைக் கேட்டிடுவாய்.
எளிதில் காரியம் முடித்திடலாம்.
வண்டியை அருகே நிறுத்திடுவாய்.
மரத்தை அடியில் வெட்டிடுவாய்.
வெட்டிய மரத்தை வண்டியிலே
வீழ்ந்திடும் படிக்குச் செய்திடுவாய்.
எப்படி எனது யோசனை?சொல்'
என்று வேலன் கேட்டிடவே,
சரி, சரி என்று அம்மனிதன்,
தலையை ஆட்டி, மகிழ்வுடனே,
28