பக்கம்:சிட்டுக் குருவி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இல்லை, இல்லை என்அப்பா
பெயரைத் தான்நாம் இடவேண்டும்.
செல்லப் பன்என வைப்பதுதான்
சிறந்தது' என்றார், என்தந்தை.

' இரண்டும் வேண்டாம், பிள்ளைக்கு
ஏற்றது சாமிப் பெயரேதான்.
பரம சிவன்தான் நல்ல'தெனப்
பாட்டி உரக்கக் கூறினளே.


31