பக்கம்:சிட்டுக் குருவி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடித்து அடித்துக் கையுமே,
அலுத்துப் போன திருடனும்,
'தடித்த தோலை உடையவன்,
தடியன் இவனும் யார்?'எனக்


கிட்டச் சென்று அவனையே,
தொட்டுப் பார்த்த உடனேயே,
வெட்கப் பட்டுச் சிரித்தனன்!
விஷயம் என்ன தெரியுமோ?

மனிதன் இல்லை, அவ்விடம்!
மரமும் இல்லை. ஐயயோ,
துணியா லான உருவம்தான்?
சோளக் கொல்லைப் பதுமையே!

44