சித்தர்கன்பூசாவிதிகள் 21
நீதமுடன் உருவாகி அரூபமாகி
நிட்களமாய் நிராமயமாய் நின்ற நீலி வேதமுடி வாகிநின்ற விமலித்தாயே
விண்ணொளியாய்ப் பரவெளியாய் அகண்ட சத்தி பாதமதிற் சிலம்புகலிர்கலிர்என்றோதப்
பத்தருக்காய்ப் பிரசன்னமான ரூபி சோதனையாய்ச் சோமகலை யாக வந்த
சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. 9 காலான சந்திரகலை நாலுங் காட்டி
கண்மூடித் திறக்குமுன்னே சோதி காட்டி மாலான அரிதனையும் அங்கே காட்டி -
மறைந்துநின்ற சுயரூபந்தன்னைக் காட்டி பாலான சோமகலைப் பாலும் ஊட்டி - பாங்குடனே எனைவளர்த்த பருவ மாதா
சூலானதாய்வயிறில் சொரூபந்தந்த - - சோதிமனோன் மணித்தாயே சுழுனைவாழ்வே.10
அண்டரண்ட புவனமுந்தான்் நீயே யானாய்
அம்புவியில் சோதிமனோன்மணியும் ஆனாய் - கண்டதொரு காட்சிகளைச்சொல்லப்போமோ
காரணியே பூரணியே கன்னியாளே விண்டதொரு மகிமைகளை வெளிவிடாமல்
வேண்டியதோர்தீட்சைகளைமுடித்துக்கொண்டேன் தொண்டனைநீ எப்போதும் ஆள்வாயம்மா
சோதிமனோன்மணித்தாயே சுழுனைவாழ்வே.11