பகுதி) - மாலை மாற்று 387
மன்னனே! சீமான் - அழகுடையவனே! ஆகா இராமா - சகலரும் விரும்பு மிராமனே! வாமனா சீதரா போதா - வாம னனே! சீதரனே ! ஞான மயமானவனே! தா தா தாள் நீ . நீ உனது திருவடித் தாமரைகளைத் தந்தருள்வாயாக (எ . று.)
இஃது கடவுள் வாழ்த்து என்னும் துறை.
4. மாலை மாற்று
இஃது ஒரு செய்யுளின் முதற்கணின்று படிக்கும்போது முடிந்தவாறு போல, இறுதியிலே தொடங்கிப் படித்தாலும் அச்செய்யுளே வர இயற்றப்பட்ட செய்யுளாகும். மாலை மாற்று. மாலைபோல மாறுதலுடையது ; மாலை - வரிசை, மாற்று - மாறுதலுடையது எனினுமாம்.
ஒருசெயுண் முதலீ றுரைக்கினு மஃதாய் வருவதை மாலை மாற்றென மொழிப.??
என்பது மாறனலங்காரம். இதற்குதாரணம் :
1, நீவாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ.” (௪)
இதன் பொருள் :-நீவாத மாதவா -நீங்காத பெருந்தவ முடையோனே தா மோக ராகமோ தாவாது - வலிய மயக்க வேட்கையோ நீங்காது ; அம்மாது அவா நீ - (ஆதலால்) அழகிய பெண்ணினுடைய ஆசையினை நீக்கியருள்வாயாக (அவள் விருப் பத்தை நிறைவேற்றுவாயாக) (எ - று.)
இது பாங்கி கூற்று.
2. “ வாயாயா நீகாவா யாதாமா தாமாதா
யாவாகா நீயாயா வா.”. (௫)
இதன் பொருள்-வாயாயா - எமக்கு வாயாதன (கிடையா தவை) யாவை? நீ காவாய் - நீ எம்மைக் காத்தருள் புரிவாய்; யாதாம் (இன்றேல்) யாதாகும்.மாது ஆம் மாதா- இம்மாது பெரிய வருத்தமுறுவள்; யா:ஆகா-( விரும்பினால் ) எவை முடியாதன ?, ஆயா நீ வா- யான் கூறியவற்றை நன்காராய்ந்து 'நீ வருக (எ - று)
68