பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

சிறிது நேரத்திற்குள்ளாகவே, நெருப்பின் சூடு அந்த இரும்புத் துண்டில் ஏற ஏற, புழு, பூச்சிகள் எல்லாம் தாமாகவே ஓடிவிடும். அந்த இரும்புத் துண்டும் ஒளிமயமான காட்சியை அளிக்கும்.

அதே போன்று மனத்தில் இறை தியானத்தினை வளர்த்துக் கொண்டே இருந்தால், தீமை செய்கின்ற ஆசைகள் எல்லாம் தாமாகவே மறைந்து போகும். இறைவன் காட்சியளிப்பான்.

குருவருதல்

தாயுமான சுவாமிகள் பாடுகின்றபோது, அழகாக ஒரு கருத்தினைச் சொல்லுகின்றார்:---

ஒய்வில்லாமல் இறைவன் தியானத்தில் நிலைத்து நின்று, உருகினால், பேரின்பம் பெருகி, இறைவன் காட்சி கிட்டும் என்று நமக்கெல்லாம் போதிக்கின்றார்.

"வாயாதோ இன்பவெள்ளம் வந்து உன் வழியாகப்
பாயாதோ, நானும் பயிராய் பிழையேனோ
ஓயாமல் உன்னிஉன்னி உருகுநெஞ்சே அந் நிலைக்கே
தாயான மெளனனருள் சந்திக்க வந்திடுமே."

மனத்தினை எப்பொழுதும் ஒருமைப்படுத்தும் பயிற்சி செய்து கொள்ளல் வேண்டும். இறைவன் குரு வடிவமாக வருவான் என்று தாயுமான சுவாமிகள் அறிவுறுத்துகின்றார். -

அழுக்கு நீக்குக

மனத்தினைத் தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் செய்கின்ற செயல்கள் அனைத்தும் முற்றிலும் பயனற்றவை ஆகும். மனத்தில் அழுக்கு இல்லாமல் எப்போதும் பார்த்துக் கொள்ள வேண்டும்.