பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

மூன்று வகையினர்

பொதுப்படக் கூறப்படுகின்ற, கருத்துக்கள் எல்லாம் ஆழ்ந்து சிந்திக்கின்ற வகையில் வேதாந்த நூற்களைப் பார்த்து, தெரிந்து கொள்ளுதல் நல்லது. மானிடப் பிறப்பில் மும்மலங்கள் உள்ளவர்கள் -- இரு மலங்கள் உள்ளவர்கள் -- ஒரு மலம் உடையவர்கள் என்றெல்லாம் வகைப்படுத்திக் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு எல்லாம் ஆன்மீகத் துறையில் விளக்கம் செய்கின்ற நூல்கள் சகலர், , பிரளயாகலர், விஞ்ஞானகலர் என்று அழைக்கிறார்கள்.

உபதேசம் செய்கின்ற முறைகள் உதாரணங்களினால் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.

ஆமைகள் முட்டையிட்டு வைத்து நினைப்பினாலேயே குஞ்சு பொறிக்கின்றன என்றும் -- தண்ணீரில் ஓடுகின்ற:தாய் மீன்கள் பக்கத்தில் ஓடிவருகின்ற குஞ்சு மீன்களை கண்களால் பார்ப்பதினாலேயே அவைகள் காப்பாற்றப்படுகின்றன என்றும், கோழிகள் முட்டைகளின் மீது அமர்ந்து (அடைகாத்து) குஞ்சுகள் பொறிக்கின்றன என்றும் உலகியலில் கண்டு வருகின்றோம்.

இந்த நிகழ்ச்சிகளை உதாரணமாகக் கொண்டுதான் குருமார்கள் நினைத்தும் ~ பார்த்தும் ~ தொட்டும் . செய்கின்ற உபதேசங்கள் விளக்கம் செய்யப்படுகின்றன.

ஊழ்வலி

மனித வாழ்க்கையில் இயற்கையாக நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை ஊழ்வினைப் பயன் என்று சொல்லுகிறார்கள். 'ஊழ்வினை' என்பது வலிமை மிக்க தாகும் என்று கூறப்படுகின்றது. 'வலிமை' என்ற சொல் தடுக்க, முடியாமல் வந்தே தீரும் என்ற கருத்தினையே வற்புறுத்திக் கூறுவது ஆகும்,