பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 4. எங்கே நிம்மதி அந்த வீடு வெறிச்சோடிக் கிடந்தது. வீட்டிலே இருந்த பெண்கள் மூலைக்கொருவராக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சந்தோஷ சாகரம் என்று சகலராலும் பாராட்டப்பட்ட அந்த வீட்டில், அப்படி என்ன நடந்துவிட்டது? ஒரு வாரமாக இப்படித்தான் இருக்கின்றார்கள். வீட்டின் தலைவர் வேலவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார். அந்த வீட்டுப் பெண் மணிகள் கேட்கவே இல்லை. 2 O கலங்கிய கண்களும் சிந்திய மூக்குமாக சிந்தை கெட்டுக் கிடந்தார்கள். சாப்பாட்டைக்கூட சம்பிரதாயத் துக்காக வயிற்றுக்கு அனுப்பி வைத்தார்கள். இப்படியே போனால் படுத்த படுக்கையாகி விடுவார்கள் என்று பயந்து போனார் வேலவன். வேலவன் தன் தாயாரைப் பார்த்தார். தன் மனைவியைப் பார்த்தார். சேதி அறிந்து சமாதானம் சொல்ல வந்த சகோதரிகளைப் பார்த்தார். எல்லோரும் நிலைகுலைந்து கிடந்தார்கள். எதையோ பறிகொடுத்தவர்கள் போலத்தான் இருந்தார்கள். பறிபோவதா! ஆமாம்! பாத்திரங்கள் சில பறிபோயிற்று. பறித்துக் கொண்டு பறந்தோடியவன் அவர்கள் வீட்டிலே கடந்த இருபது ஆண்டுகாலமாக வேலை செய்து வந்த வீராசாமி. பாத்திரங்கள் வெள்ளியால் ஆனவை. ஏதோ இந்த காலத்து விலைப் படி 500 ரூபாய் பெறும். ஆனால்