பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 21 அதுவல்ல முக்கியம். அவை அவர்கள் பாட்டன் சொத்து என்பதாக பேசிக் கொண்டார்கள். பாத்திரங்கள் போய்விட்டன. அந்த வீட்டின் சந்தோஷமும், சகஜமான வாழ்க்கையும் அதோடு கூடவே போய் விட்டன. - வேறு பல பாத்திரங்கள் வாங்கித் தருவதாகச் சொல்லிப் பார்த்தார் வேலவன். முடியாது என்று மறுத்து விட்டார்கள். வேறு ஊருக்காவது போய் வரலாம் என்று கூப்பிட்டுப் பார்த்தார். வேதனை அதனால் தீராது என்று ஒதுங்கிக் கொண்டார்கள். வேறு வழியில் லாமல், விடிவு காலம் வராதா வேதனை தீராதா... வீட்டிலே முன் போல மகிழ்ச்சி நேராதா என்று வானத்தைப் பார்த்து நிற்க ஆரம்பித்தார் வேலவன். - விசுவாசமுள்ள வேலைக்காரனா திருடினான் ? வேறு எதையாவது எடுத்துக்கொண்டு போகக்கூடாதா? பரம்பரை பரம்பரையாக இருக்கும் பாத்திரங்களையா எடுத்துக் கொண்டு போவது? இந்த கடுமையான மனம் அவனுக்கு வரும் அளவுக்கு, என்ன நடந்திருக்கும்? இப்படி எண்ணி எண்ணிப் பார்த்தார் வேலவன். மீண்டும் மன அமைதி வீட்டாருக்கு வராதா! அவர்களை மீண்டும் மகிழ்ச்சியுடன் நடமாடச் செய்ய முடியாதா என்ற நினைத்தபோது 'சார்' என்ற குரல் அவரை கிளர்ச்சியடையச் செய்தது. நிமிர்ந்து பார்த்தார். எதிரே இரண்டு போலீஸ்காரர் கள் அவர்களுக்கு இடையிலே வேலைக்காரன் வீராசாமி. கைகளில் காணாமல்போன பாத்திரங்களுடன் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தான்.