பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 'உங்கள் வீட்டிலே திருடியதாக அவன் சொன்னான். அதனால்தான் இங்கே கொண்டு வந்திருக்கிறோம் உண்மைதானா என்று காவலர் ஒருவர் கேட்டார். இல்லையே நான்தான் அவனுக்குக் கொடுத்து அனுப்பினேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று இப்படி சொல்லியிருக்கிறான் என்று வேலவன் சொன்னார். காவலர்களை ஏற்றுக் கொள்ள வைத்தார். முடிவு. வீராசாமிக்கு விடுதலை! அங்கேயே அவனை விட்டு விட்டுக் காவலர்கள் சென்று விட்டார்கள். தனியாக நின்றவனை சொல்தாக்குதலின் மூலமாக ஏசுவதில் ஈடுபட்டார்கள் அந்த வீட்டுப் பெண்கள். சபித்தார்கள். சாபமே கொடுத்தார்கள். ஏங்கிக்கிடந்த வர்கள் இதயம் கொந்தளிக்கும் எரிமலையாக மாறியதே தவிர குளிரும் வழியைக் காணோம். ஏச்சு மழை நின்றது. மரத்தில் கட்டிப் போட்டு அடித்தால்தான் தீரும், மனம் ஆறும் என்றார்கள். தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள். வேலவன் சமாதானம் கூறிப் பார்த்தார். அவர்கள் முகத்திலே கோபமே கொப்புளித்தது. வீட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார். அவரது துணைவியார் 2000 ரூபாய் இருக்கிறது என்றார். எடுத்துவா என்றார். அந்த அம்மாள் மறு பேச்சு பேசாமல் எடுத்துக் கொண்டு வந்தார். என்ன நடக்கப் போகிறது என்று அவரது முகத்தையே மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 'இந்தா வீராசாமி! இதை எடுத்துக் கொள். வேறு எங்கேயாவது போய் வியாபாரம் செய்து பிழைத்துக்