பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு அடிகளார்



1048. “செல்வம், செல்வாக்கு இரண்டும் ஏராளமான நண்பர்களைக் கூட்டித் தரும். இதனால் பயனில்லை. துன்பத்தில் துணையாய் அமைவோரே நண்பர்கள்.”

1049. “பொறுப்புடன் பணியினை ஏற்காதவரிடம் பணிகளை ஒப்படைப்பது தற்கொலைக்குச் சமம்.”

1050. “பிறர் முயன்று பெற்ற படிப்பினையின் வழி, பாடம் கற்றுக் கொள்பவர் எண்ணிக்கையே மிகுதி.”

1051. “பொருளாதார ஏழ்மைக்குக்குத் தாய் உழைப்பின்மையே!”

1052. “நல்வாழ்க்கையின் தேவைகளைக்கூடத் திட்டமிட்டு அடைய முயற்சிப்பார் இல்லை.”

1053. “எல்லாருக்கும் சொந்த வீடு கட்டிக் கொள்ள ஆசையிருக்கிறது. ஆனால் பொருள் ஈட்டும் ஆர்வமில்லை!”

1054. “கடந்த காலம் கடந்ததே. கவலைப்பட்டு பயன் இல்லை. இனிவரும் எதிர்காலம் நமது கையில் இல்லை. அதைப் பற்றிக் கவலைப்படுவது பொருளற்றது. ஆதலால் நமது வசத்தில் இருக்கிற நிகழ்காலத்தைப் பற்றிக் கவலைப்படுக.”

1055. “மக்களுக்குப் பொருளின்மேல் ஆசையிருக்கிறது. ஆனால், உழைப்பின் மேல் ஆசை இல்லை.”

1056. “எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது.”