பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

5



“கருத்து வேற்றுமைகள் வழி பகைமையை வளர்த்தல் எந்த சூழ்நிலையிலும் கருத்துக்களில் தெளிவு காண முடியாது போய் மானிட வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டுவிடும்”.

22. “கருத்து வேற்றுமைகள் நூற்றுக்கு நூறு எப்போதும் இருக்க இயலாது. ஆதலால், மனிதகுல ஒருமைப்பாடு கருதியும் அறிவு வளர்ச்சி கருதியும் உடன்பாடுடைய கருத்துக்களில் ஒன்றுபட்டு செயல் படத் தொடங்கினால் காலப் பேர்க்கில் உறவுகள் வளரும். தெளிந்த அறிவியல் முடிவுகளும் கிடைக்கும் இந்த முறையே நமது அணுகுமுறை”.

23. “பல்வேறு கருத்துடையவர்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில், தம் கருத்தை - மாறுபாட்டை தன் கட்சியை - சாதியை நினைவு கூரத்தக்க வகையில் பேசுவதும் மற்றவர் கருத்தை விமர்சனம் செய்வதும் பொதுமைக்கு முரணாக அமையும்.

பொது மேடைகளில் மாறுபாடுகளைத் தவிர்ப்பது தலைசிறந்த நாகரிகப் பண்பு”.

24. “நமது வாழ்க்கையின் நோக்கங்களை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் ஆவேச உணர்வுடன் உழைக்க வேண்டும்”.

25. “ஒரு சமூகத்தை உதவிகள், சலுகைகள் மூலமே வளர்த்து விடமுடியாது. அந்தச் சமூகத்திற்கு வளரவேண்டும் என்ற உணர்வும் முன்னேற்றத்திற்காக உழைக்கும் மனப்பாங்கும் வேண்டும்”.