பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

43



336. மக்களுக்கு அவசியமானது நிகழாததால் எங்கும் தேநீர்க்கடை-லாகிரி பொருள்கள் விற்கும் கடை. இவை மனிதனுக்குரியன அல்ல.”

337. நாட்டு மக்கள் மதர்த்த சோம்பலுக்கு இரையாகி பிச்சைக்காரர்களாகிவிட்டனர்.” . . .

338. “நல்லதை நாடிச் செய்யும் மனிதன் நாளும் வளர்வான்.”

339. “ஆசை தீரக் கொடுப்பது இயலாத காரியம்.” ஆசையும் நன்றியும் முரண்பட்ட பண்புகள்.”

340. “பழங்காலத் தமிழரசர்கள் எளிய வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.”

341. “குழு மனப்பான்மை நீதியைக் காட்டாது.”

342. “அரசு நிர்வாகத்தின் மையப்பங்கு-அரசின் உரிமைகளை-அதிகாரங்களை யாரும் மீறக்கூடாது.”

343. பண வரவு இருந்தால் மட்டும் செல்வந்தராக இருக்க முடியாது. எண்ணிச் செலவழித்தால்தான் செல்வந்தராக இருக்கலாம்.”

344. “எதையும் காலத்தில் முறையோடு செய்தால் எண்ணிலா நன்மைகள் வளரும்.”

345. “நிதி நிர்வாகம் திறறை இல்லாதுபோனால் பற்றாக்குறை மனப்பான்மை உருவாகும்.”

346. “பல பணிகள் இருந்தால் பலரை இயக்கி-பலமுனைகளில்-தொழிற்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்.”

347. “வரவு இல்லாமல்-செலவை வரவழைத்துக் கொள்பவர்கள் யோக்கியர்களாக இருத்தல் அரிது, இயலாது.”