பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

47



377. “ஆர்வம் மின்விசையின் ஆற்றலிலும் வலிமையானது. ஆர்வமே செயலூக்கத்தின் ஊற்றுக் களன்.”

378. “உடலை வளர்த்தவர்கள், உணர்வை வளர்த்துக் கொள்ளத் தவறிவிட்டார்கள்.”

379. “காரியங்கள் நடந்தால் மட்டும் போதாது. உரிய காலத்தில் நடக்க வேண்டும்.”

380. “உடலுக்கு, இன்புறுதலே இயற்கை நோய் இயற்கையன்று. நோய் வரவழைத்துக் கொண்டதே.”

381. “விலங்குகள் கூடக் காலந்தவறாமல் பழகிக்கொள்கின்றன. ஆனால் மனிதர்கள்...?

382. “கடமைகள் அழுத்தும் பொழுது அவலத்திற்கு ஆளாவோர்கள் கடமைகளைச் செய்யும் மனப் போக்கில்லாதவர்கள்.”

383. “அதிருப்தியைத் தருபவர்கள் திருப்தி பற்றிப் பேசும் உரிமை இல்லாதவர்கள்.”

384. “ஒழுங்குகள் - ஒழுக்கங்கள் உருவாகப் பல ஆண்டுகள் ஆகும்.”

385. “காதல் வாழ்க்கையற்றோர் வீட்டில் குழந்தைகள் அதிகம் இருக்கும்.”

386. “முறைப்படுத்தப்பெற்ற செயல்கள் முழுப் பயன்தரும்.”

387. “விதிமுறைகளைப் பின்பற்றிக் காரியங்கள் செய்தலே விழுமிய பயனைத்தரும்.”

388. “ஏரிகளில், தானே நத்தைகள், மீன்கள் தோன்றிவிடுகின்றன. இதுபோலச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி வளம் அடைபவர்களே வாழ்பவர்கள்.”