பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

71



595. “நாட்டில் விஞ்சிய நிலையில் வளரும் பண ஆசை குறைந்தால்தான் அறிவு வளரும்; திறன் வளரும்.”

596. “பெரியவர்கள் செய்யும் தவறுகள் கட்டாயம் பாராட்டப் பெறும். இதுதான் இந்த உலகத்தின் விநோதமான போக்கு.”

597. “ஆபாசம் என்பது காணப்பெறும் பொருளில் இல்லை. காண்பவர் கருத்தில் உள்ள குறை பாடேயாம்.”

598. “தன்னம்பிக்கை ஒன்றைத் தவிர வேறு எதுவும் துணையில்லை.”

599. “உயர் குறிக்கோள் இல்லாத வரையில் தவறுகள் திருந்தா.”

600. “தாய்மொழி வழிக் கல்வி சிந்தனையைத் தூண்டி வளர்க்கும்.”

601. “தாய்மொழிக் கல்வி, கற்ற அறிவைப் பன்மடங்கு விரிவாக்கும்.”

602. “பழந்தமிழரின் கட்டுமானக் கலைக்கு, தஞ்சைப் பெருவுடையார் கோயில் எடுத்துக்காட்டு.”

603. “பழந்தமிழரின் வாழ்வில் தண்ணீர்நிர்வாக்க் கலை பொருந்தியிருந்ததற்கு, கரிகாலன் கட்டிய கல்லணை எடுத்துக்காட்டு.”

604. “தட்ப வெப்பங்களைச் சமநிலைப்படுத்தி வாழ்ந்தமைக்கு, சிலம்பில் வரும் ஏழுமாடக் கூடம் சான்று.”

605. “தன்னலம் சார்ந்த வாழ்க்கைக்கு தூண்டுகோல் தேவையில்லை.”