பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு அடிகளார்



775. “எல்லாரும் புகழை-பெருமையை விரும்புகிறார்கள். அதைத் தாராளமாக மற்றவர்களுக்கு வழங்குக.”

776. “நல்லவண்ணம் மக்கள் முன்னேற்றத்திற்குப் பணி செய்யும் நிறுவனத்திற்கு ஆதரவு இருப்ப தில்லை.”

777. “அரிமா சங்கம், சுழற்குழுக் கழகம் போன்ற பொது அமைப்பில் இருப்பவர்கள், பிரிவினைகளை வளர்த்து உறவைக் கெடுக்கும் சாதிச் சங்கங்கள், மத அமைப்புகளில் பங்கு பெறுதல் கூடாது.”

778. “இன்று எல்லா வகையான பணிகளிலும் சிறந்தது, மக்களிடத்தில் வாழ்வு விருப்பங்களையும் உரிமைகளையும் உணர்த்துதல்.”

779. “விளம்பரத்தாலோ, சலுகைகளாலோ பேச்சாலோ வாக்குகள் வாங்கப்படும் வரை மக்களாட்சி முறை சிறக்காது.”

780. “பணத்தின் அருமை அறிதல் வேறு. பணத்தின் மீது ஆசை வைத்தல் வேறு.”

781. “பணத்தின் மீது விருப்பம் கொண்டு, ஈட்டி, முறையாகப் பயன்படுத்துதலே நல்வாழ்க்கை.”

782. “உலக ஒருமை, பூத பெளதீகங்களால் ஏற்பட்டிருக்கிறதே தவிர, ஆன்மீக ரீதியாக ஏற்பட வில்லை.”

783. “அறிவியல் உலகத்தை இணைத்தது. உயிர்க்குலத்தை இணைக்கவில்லை.”

784. “மதம் இயக்கமாக-வாழ்க்கை முறையாக இருந்த வரையில் மக்களின் வாழ்க்கை நிலையை