பக்கம்:சிந்தனை மேடை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 போல் அவர் என்ன சொல்லப் போகிருரென்று எதிர் பார்த்து நிற்பீர்களே; அதுவும் ஒரு மூட நம்பிக்கைதான். சாயங்காலம் மூன்று மணியிலிருந்து நாலரை மணிக்குள் முப்பது நண்பர்கள் வீட்டுக்குப் போய் முப்பது பேர் வீட்டி லும் காப்பி குடிக்கச் சொல்லிக் குடிக்க வைத்தபின் முப்பத் தோராவது நண்பர் வீட்டிலும் இனி வயிறு தாங்காது” என்று சொல்லி மறுக்கத் துணிவின்றி நிற்பீர்களே; அது தான் மூடநம்பிக்கை. அதுதான் கைவிட வேண்டிய - சடங்கு. நியாய உணர்ச்சியும், தன்னம்பிக்கையும், உள்ள ஒருவன் ஒப்புக்காக எதையுமே செய்யக் கூடாது. பல காரியங்களை அந்தக் காரியங்களின் அவசிய அநாவசியங் களைப் பற்றிச் சிந்தித்து முடிவு எடுக்காமல் ஒப்புக்காகவே செய்து பழகுகிறவன் நாளடைவில் கோழையாகி விடுவான். "ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்றே அதைச் செய்து முடிக்கும் தன்மானம் அவனிடமிருந்து படிப்படியாகப் போய்விடும். அப்படி நிலைக்கு ஆளான பின்பு செய்தே முடிக்க வேண்டும்’ என்ற வகையைச் சேர்ந்த காரியத்தைக் கூட ஒப்புக்காகச் செய்வது போலத்தான் அவளுல் செய்ய முடியும். இராமாயண மேடை நாடகத்தில் இருபது ஆண்டு களாக அநுமார் வேடம் போட்டுப் போட்டு அந்த வேடத் துக்கு ஏற்றபடியாக வாயைக் கோணிக்கொண்டு நிற்கப் பழகிய ஒருவன் மேடையிலிருந்து இறங்கி நிஜ உலகில் முகத் தைக் காட்டுகிற போதுகூட அதே கோணல் சிறிதளவு தெரியத் தொடங்கி விடும். எதையும் ஒப்புக்காக ச் செய் யப் பழகிக் கொண்டு விடுவதே ஒரு தீராத நோய். கூடிய வரை காரண காரியத்தோடு ஒழுங்காகச் செயல்பட வேண் டும். அப்படிச் செயல் படாமல் நாகரிகச் சடங்குக்கு ஏற்ப ஏனே தானே என்று செயல்படுவதற்குப் பழகிக் கொண்டு விட்டால் அதுதான் மூட நம்பிக்கை என்று சொல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/22&oldid=825883" இலிருந்து மீள்விக்கப்பட்டது