பக்கம்:சிந்தனை மேடை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பிடிக்காத ஒரு சடங்கைச் செய்வதுபோல ஆக்கிக் கொள் கிருன்? அவனைப் போன்றவ்ர்களே நாகரிக மனிதர்களாக நம்பி மன்னித்துவிட்டு யார் யாரையோ மூட நம்பிக்கைக் காரர்களாகவும் ஆஷாடபூதிகளாகவும் கற்பனை செய்து நாம் இகழ்கிருேமே அதைப் பற்றி இரண்டு விநாடி ஆர அமரச் சிந்தித்துப் பாருங்கள். புதிய கொள்கைகள் உங்களுக்கு அப்போது புரியும். எதைப் போற்றலாம்? எதை இகழ லாம்?’ என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். எவை போவிச் சடங்குகள்? இனிமேல் வருகிற தலைமுறையில் எவை மூட நம்பிக்கைகள் என்பதைப் பற்றியும் நீங்கள் புதிய நோக் கோடு சிந்திக்கத் தொடங்குவீர்கள். அப்படி ஒரு புதிய சிந்தனையை இந்த மேடையில் இந்தப் பிரச்னையைப பற்றித். தொடங்கி வைககிறபோது சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றி நிறைந்த நம்பிக்கைகள ஏற்படுகின்றன. உங்களுக்கும் தான்; எனக்கும்தான். பகட்டுக்காகச் செய்கின்ற ஆடம்பரங்களையும் மூட நம்பிக்கையோடுதான் சேர்க்க வேண்டும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுப் ப்தினைந்துபைசாவுக் குத் தபால் கார்டு வாங்கி எழுதி அது விரைவில் போய்ச்சேர வேண்டும் என்பதற்காக அடையாறிலிருந்து மவுண்ட் ரோடு தபால் நிலையத்துக்கு அதைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு ஒரு பாண்டியாக் கார் சவாரியைச் செலவழித் துத் தபாலில் சேர்க்கிற மாதிரிப் பொய்ச் சிக்கனங்கள் பல உண்டு, சிக் கனத்தைக் காப்பாற்றுவதற்காகப் பயன்படுகிற ஊதாரித் தனத்தைப் பார்த்தும் நமக்கு அதன்மேல் வெறுப்புத்தான் ஏற்படுகிறது. . - நாகரிகம் சடங்குகளிலோ, ஆடம்பரங்களிலோ இல்லை. நியாயத்தையும், கருணையையும் மதித்துப் பண்போடு வாழ் கிற ஏழையும் நாகரிகமாக இருக்க முடியும். பண்பற்று வாழ் கிற செல்வந்தரே மற்றவர்க்கு அநாகரிகமாகத் தோன்றவும் இடமுண்டு. . உலகத்தில் நாகரிகம் பண்பாடுகளால் அளவிடப்பெற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/25&oldid=825889" இலிருந்து மீள்விக்கப்பட்டது