பக்கம்:சிந்தனை வளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 6 $

தைகள் இந்நாட்டின் மிக மூத்த காங்கிரஸ் தலைவர்களுட. னும் காங்கிரஸ் இயக்கத்துடனும் சம்பந்தப்படுத்தியே பேச வும்-எழுதவும் பட்டுவிட்டதால், மற்றவர்களுக்கும், மற்ற இயக்கங்களுக்கும் அது சம்பந்தமில்லாதது போல ஒரு. பிரமை உண்டாக்கப்பட்டு விட்டது. தேசபக்தி-தேசபக். தன்-என்ற மிக உயர்ந்த-மிக விரிந்த பொருளுள்ள பதத் தின் எல்லே குறுக்கப்பட்டுவிட்டது. தற்செயலாக இப்படி நேர்ந்து விட்டதன் காரணமாக இப்போது இப்பதத்தை மறுபரிசீலனை செய்யவேண்டி யிருக்கிறது.

நாம் சுதந்திரம் அடைந்து விட்ட பின் தேசபக்தி' என்பது பொருளற்றதாகி விட்டது போல் பேசுகிறவர் களும் இங்கே இருக்கிரு.ர்கள்.

சுதந்திரம் அடைய வேண்டும் என்று போராடும் தேசத் தைவிட, சுதந்திரம் அடைந்து விட்ட தேசத்தில்தான் அதிக மான தேசபக்தி தேவை.

ஜனகனமன’ பாடும்போது எழுந்திருந்து விறைப் பாக நின்று விடுவது, ஒருமைப்பாட்டுப் பிரதிக்ஞை எடுத் துக் கொள்வது, நாம் இந்தியர்-நமது நாடு இந்தியா’ என்று கூட்டமாக ஒன்றுகூடிக் கிளிப்பிள்ளைகள் போல் உச்சரிப்பது இவை எல்லாமே வெறும் சடங்கு ரீதியான தேசபக்திதான்.

நாட்டின் உற்பத்தித் திறனை வளர்ப்பது, உணவுப் பொருளை வீணுக்காமல் இருப்பது, மிகவும் அரிதான அந்நியச் செலாவணியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, காரணமற்ற வேலை நிறுத்தங்களால் தேசப் பொருளாதாரத் தைச் சீர்குலைக்காமல் இருப்பது, கலவரங்களும் தடலடிப் போராட்டங்களும் நடத்தித் தேசத்தின் பொதுச் சொத்துக் களுக்குச் சேதம் விளைவிக்காமலிருப்பது இவை எல்லாம் தான் உண்மையான தேசபக்தி என்று இன்று கொள்ள வேண்டும்.

கதர் கட்டிக் கொண்டு, மகாத்மா காந்திக்கும் பாரத. மாதாவுக்கும் ஜே போட்டுவிட்டு, மேலே சொன்ன தேச நலனுக்குகந்த எல்லாச் செயல்களேயும் காற்றில் பறக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/65&oldid=562307" இலிருந்து மீள்விக்கப்பட்டது