இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சம்பந்தம்? வெளியே இருந்தால் வாழ முடியாதா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வான். விடுமுறைக் காலங்களில் கிராமத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும். அப்போது, தான் வளர்க்கும் நாய், முயல் முதளியவற்றை ஊருக்குக் கொண்டு செல்வான். ஆனுல், செடி கொ டி க ளை யு ம் கொண்டு செல்ல முடியுமா? ஐயோ, கொண்டு செல்ல முடியவில்லையே! இவை தண்ணீரில்லாமல் வாடிவிடுமே!’ என்று வருந்துவான். செடி கொடிகளிடத்திலே அப்போது அவன் கொண்டி ருந்த அன்புதான், பிற்காலத்தில் அவனே ஒரு பெரிய விஞ்ஞானி ஆக்கியது! ஆம், நம்மைப் போலவே செடி கொடிகளுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்ற
- 3.
ண்மையைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவனே அந்தச் சிறுவன்தான்! இப்போது அந்தச் சிறுவன் யாரென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜகதீஸ் சந்திர போஸ் என்று உடனே கூற ஆரம்பித்து விடுவிர்கள்! ایم:ن - 74