பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்




35. பொய்யரசர்

திருமணம் ஒன்றினால் இரண்டு குடும்பங்கள் இணைக்கப்பட்டன. மணமகனின் தந்தை பெரும் செல்வர். அவர்(தன் சம்பந்தி) மணமகளின் தந்தையை வீட்டிற்கழைத்துத் தன் வீட்டிலுள்ள விலையுயர்ந்தப் பொருள்களையெல்லாம் காட்டிப் பெருமை பாராட்டிக் கொண்டார். பின்னர் “இதைப் போன்ற விலைமதிக்க முடியாத பொருள்கள் ஏதேனும் உங்களிடம் உண்டா?” என்று கேட்டார். “உங்களிடத்தில் உயிரற்றப் பொருள்கள் தான் இருக்கின்றன. இங்கு நான் வியப்படையும்படியாக ஒன்றுமில்லை. எங்கள் வீட்டில் விலையேறப் பெற்றதும் உயிருள்ளதுமான இரண்டு அற்புதமான கருவூலங்கள்