பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கிவாஜ §8

என்று பெயர். பழங்காலத்தில் ஒரு புலவர் அப்பெருமானைப் பற்றி ஒரு குறவஞ்சி பாடியிருக்கிறார். அதற்கு அமர விடங்கர் குறவஞ்சி என்று பெயர்.

இவர் காளியைத் தரிசித்தார்; அமர விடங்கரையும் தரிசித்து வணங்கினார். பனைமரம் நட்ட நடுவில் முளைத்திருந்த ஆலமரத்தையும் பார்த்தார். அமர விடங்கருக்கும் அந்த ஆலமரத்துக்கும் ஒரு சிலேட்ை பாடினார். - -

கோலும் அமர விடங்கர்தம் கோயில்

அகத்தும்முகில் போலும் திருமேனி கொள்காளி

கோயிற் புறத்தினிலும் ஆல மடக்கிய அப்பனை யாங்கள்கண்

டங்கருமை சால உணர்ந்தனம், பாரியூர் என்னும்

தலத்தினிலே.

முகில் போலும் திருமேனி - மேகத்தைப் போன்ற கரிய திருமேனியை அமர விடங்கருக்கு: ஆலம் மடக்கிய அப்பனை யாங்கள் கண்டம் கருமை சால உணர்ந்தனம் - ஆலகால விடத்தைப் பிறரை அழிக்காமல் மடக்கி உண்ட தந்தையாகிய பரமசிவனை அடியேங்கள் அவனுடைய கண்டமானது கரிய நிறம் நிரம்பியிருப்பதனால் இனம் கண்டு கொண்டோம். ஆலமரத்துக்கு: ஆலம் அடக்கிய அப் பனை யாங்கள் கண்டு அங்கு அருமை சால உணர்ந்தனம் - ஆலமரம் தனக்குள் அடக்கிய அந்தப் பனை மரத்தை நாங்கள் கண்டு அங்கே அந்த அருமையை நன்றாக உணர்ந்தோம்.

வீரன் சின்னான்

வேறு ஒரு முறை இவர் கோபிசெட்டிபாளையம் சென்றபோது தேவராஜ மகால் என்ற மாளிகையில்