பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ Z33

மறி மரி

செறிகின்ற பன்னிரு தோட்குகன்

காந்தச் சிகரியிலே நெறிகின்ற அண்ணல் ஒருவனை

நேசித்த நீர்மையினை அறிகின் றிலன் அன்னை; இம்மாதின்

நோய்பட ஆம்வெறியில் மறிஎன் பதனை மரிஎன்

றனை; பிழை வந்ததுவே.

காந்தச் சிகரியில் - காந்த மலையில். தெறிநின்ற அண்ணல் ஒருவனை - நல்ல வழியில் ஒழுகும் தலைவன் ஒருவனை. இம்மாதின் நோய் பட - இந்தத் தலைவியின் மையல் நோய் நீங்க. ஆம் வெறியில் - இங்கே அமைந்த வெறியாட்டில். மறி என்பதனை மரி என்றனள் - மறி என்னும் பெயருடைய ஆட்டைச் செத்துப் போ என்றாள்; கொல்வித்தாள். பிழை - தலைவியின் நோய் தீராமை.

தனக்கு உண்டான வெறியில் மறி என்று வல்லின றகர இகரம் போட்டுச் சொல்வதை இடையின ரகர இகரம் போட்டு மரி என்றாள்; இதில் எழுத்துப் பிழை வந்தது என்பது தொனி. . * . . . *

பெருமை - சிறுமை

இருமையும் ச்ந்தருள் எம்பிரான்

காந்த எழில்ம்லையான், மருமலர் நீபத் தொடையவன் தாளை

வணங்கிலர் போல் - ஒருமை மனத்திவள் தோள் அணைந்

தானையாய் ஒர்ந்தறியாள்; பெருமையைக் கொல்வதற் கெண்ணும்

சிறுமை பிடித்தனளே.

இருக்மை - இம்மை மறுமை இன்பம். மரு மலர் நீபத் தொடையவன் - மணம் பரவுகின்ற கடம்ப மாலையை