பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

அம்மானைப் பாடல்கள்

அம்மானைக் காய்களை வைத்துக் கொண்டு ஆடும் மூன்று பெண்கள் பாடுவதாக அமைந்தது அம்மானைப் பாட்டு. ஒருத்தி ஒரு செய்தியைச் சொல்ல, மற்றொருத்தி ஒரு வினாவை எழுப்ப, மூன்றாமவள் அதற்கு விடை கூறுவாள். அந்த விடையில் இரண்டு பொருள் தோன்றும். கலம்பகம் என்ற பிரபந்தத்தில் அம்மானை என்ற உறுப்பு உண்டு. தனியே அம்மானைப் பாடல்கள் அடங்கிய மூவர் அம்மானை' என்ற நூல் ஒன்றும் இருக்கிறது. கீழ்வரும் பாடல்களில் ஈற்றடிகளில் 'சிலேடை நயம் அமைந்திருப்பதைக் காணலாம்.

ஐயம் எடுத்தான்

கற்பக வல்லி .

கலந்த சிவபெருமான் பொற்புறவே ஒடுகையில்

பூண்டனன்காண் அம்மானை, பொற்புறவே ஓடுகையில்

பூண்டனனே ஆமாயின் இற்புறமே ஐயம்

எடுத்தானோ அம்மானை ! எண்ணினர்.பால் ஐயம்

எடுத்தான்காண் அம்மானை !