சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 84
அந்தப் பையனுடைய வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தார். அவர் தந்தையைப் பார்த்து, "என்ன, இப்போதே இவனுக்குக் கால்கட்டுப் போட்டு விட்டீர்களே!" என்று கேட்டார். (கால்கட்டு கல்யாணம். காலில் போடும் கட்டு.)
ஒற்றைக் காது
ஒரு பையனுடன் இவர் பேசிக் கொண் டிருந்தார். வேடிக்கை யாகச் சில கேள்வி
களைக் கேட்டார். "இரண்டு காதும் இல்லாதவன் யார்? எனறாா, 65) L1416ET,
"செவிடன்" என்றான். - "ஒற்றைக் காதிருத் தால்..." என்று மறுபடி கேட்டார். பையன் சற்றே விழித்தான். இவர், "ஊசி" என்றார். பையன் பின்னும் விஷயம் விளங்காமல் விழித்தான். "ஊசிக்கு ஒரு
J
காதுதானே தம்பி?" என்றபோது அவனுக்கு விளங்கியது. (காது - ஊசியில் நூல் கோக்கும் இடம்)
மணிக்கட்டு
"தமிழ் மக்களின் தீர்க்க தரிசனத்தை என்னவென்று
சொல்வேன்!" என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது இவர் சொன்னார்:
"எதை நினைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?"