பக்கம்:சிரித்த நுணா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தென்னுட்டில் இரவலருண்(டு)" என்றுரைக்கும் செய்தியெல்லாம் அல்லிக் காக்கிப் பொன் னிட்டிப், புகழிட்டித், தமிழ்காக்கப் பெரும்புலவர் வறுமை யோட்டி அந்நாளில் வாழ்ந்திருந்தான் திருமுடியே! அழகப்பன் பின்னுள் வந்தான்! இந்நாளில் வள்ளலில்லை; தமிழில்லை என்கின்ற வருத்தந் தானே! மயிலுக்கும், முல்லைக்கும் மற்றவர்போல் வாரிவாரி வழங்கி டாமல், இயலிசைகூத் துணர்ந்தோர்க்கும், பாடிவந்த இனியதமிழ்ப் பாவ லர்க்கும் வயலுழுதே உரமிட்டு விதைதெளித்து வான்பார்க்கும் உழவன் போற்றும் பெயலானன் மலையன்!சீர் பேசாத வாயெங்கும் கண்ட தில்லை! அருந்தமிழுக் கேவாழ்ந்தான்; தன்னையொத்த அரசருக்கும் தோள் கொடுத்தான்; திருவெல்லாம் பொதுவாக்கி, மனையறத்துக் கிழத்திக்குக் கொடுத்தான் மார்பைத் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/16&oldid=828802" இலிருந்து மீள்விக்கப்பட்டது